பருப்பு வகைகளும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ள உணவை சாப்பிட்டு வந்தால்…
பருப்பு வகைகளும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ள உணவை சாப்பிட்டு வந்தால், வயிறு சம்பந்தமான நோய்கள் பெரும்பாலும் குறையும். ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம், ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டறிந்துள்ளனர். அதில் அதிகம் பருப்பு வகைகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தவர்களுக்கு, கணையம், இதயம் தொடர்பான நோய்களும், நீரிழிவு நோயும் உண்டாகும் ஆபத்துகள் குறைந்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.
எனவே தினசரி உணவில் பாதிக்குபாதி பருப்பு வகைகள் அடங்கியிருப்பது நல்லது.