இன்றைய தினம் – மார்ச் 31
இன்றைய தினம் – மார்ச் 31
1889 – ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
1918 – ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1931 – நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரினார்.
1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
1970 – 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது.
2004 – கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.
2007 – முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.
1950 – ஹல்தர் நாக், இந்தியக் கவிஞர் பிறந்த தினம்
1962 – ராம்கி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பிறந்த தினம்
1965 – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், தமிழகத் தமிழறிஞர் (பி. 1904) நினைவு தினம்
1972 – மீனாகுமாரி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1932) நினைவு தினம்