அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்தும் நகைச்சுவை பட்டிமன்றம்
அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்தும் நகைச்சுவை பட்டிமன்றம் : பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் நடுவராக கலந்து கொள்கிறார்
அல் அய்ன் : ஐக்கிய அரபு அமீரகத்தின் பசுமை நகராக இருந்து வரும் அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்தும் வாழ்க்கை வசந்தமாய் இனிப்பது திருமணத்துக்கு முன் ? பின் ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் இன்று வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு இந்திய சமூக மைய உள்ளரங்கம்த்தில் நடத்துகிறது.
இந்த பட்டிமன்றத்துக்கு நடுவராக முனைவர் பேராசிரியர் பீ.மு.மன்சூர், முன்னாள் துணை முதல்வர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்.
இந்த விழாவில் தமிழர்கள் அனைவரும் பாரம்பர்ய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொள்ளுமாறு சங்க நிர்வாகி முபாரக் தெரிவித்துள்ளார்.