வீர சுதந்திரம் காத்து நிற்போம்!
வீர சுதந்திரம் காத்து நிற்போம்!–கி.ரமேஷ்
பெற்ற சுதந்திரம்பறித்திடப்போமோபார்த்துக் கொண்டேவாளாவிருந்திடலாமோ?
ஊனையும் உயிரையும்ஈந்திட்டேவீரசுதந்திரம் பெற்றுத் தந்தார்
பெற்ற சுதந்திரம்பறித்திடப்போமோபார்த்துக் கொண்டேவாளாவிருந்திடலாமோ?
வானையும் பூமியையும்பார்த்துக் கொண்டேஉழவு செய்திட்டஉழவர்கள்
ஊருக்குழைத்து உணவிட்டார்உழவிட்ட உழவனைநடுத்தெருவிலிட்டுவேடிக்கை பார்க்கும் கூட்டமிங்கே!
பெற்ற சுதந்திரம்பறித்திடப்போமோபார்த்துக் கொண்டேவாளாவிருந்திடலாமோ?
மண்ணில் பல உயிர் பலிகொடுத்தேஎட்டு மணி நேர வேலை பெற்றோம்முதலாளிகள் மனம் குளிர்ந்திடவேபெற்ற உரிமையைப் பறிக்கின்றார்
நீண்ட போராட்டம் செய்திட்டேநிரந்தர வேலை பெற்றிட்டோம்முதல் போட்டவன் மனம் குளிர்ந்திடவேஅத்துக் கூலியாய் ஆக்குகின்றார்
பெற்ற உரிமைகள் பறிபோகவேடிக்கை பார்த்தல் சரிதானோபெற்ற உரிமைகள் காத்திடவேசுதந்திர நாளில் உறுதி கொள்வோம்
இந்திய மக்களைக் கொள்ளை கொண்டுஏற்றம் பெற்றிட்ட தனியாரின்முதுகை முறித்திடவே தேசியமாயினவங்கியும் காப்பீடும்
வியர்வை சிந்தி ஈட்டிய பணத்தைகொள்ளையடித்த தனியாரிடமேமீண்டும் கொடுப்பதை பார்த்திருப்போமோ?
பனிபடர்ந்த இமயத்திலேஇந்திய நாட்டைக் காத்து நிற்கும்இராணுவ வீரரை அவமதித்தேபாதுகாப்பும் தனியாரிடமோ?
இந்தியா நாட்டின் சாலைகளும்விமான நிலையமும், இரயிலுமேகடல் துறைமுகமும் சேர்த்துக் கொண்டுஅனைத்துமே தனியாரிடமோ?
பெற்ற சுதந்திரம்பறித்திடப்போமோபார்த்துக் கொண்டேவாளாவிருந்திடலாமோ?
வீரசுதந்திரம் காத்து நிற்போம்மக்கள் நலனைப் பேணி நிற்போம்பெற்ற உரிமைகள் காத்து நிற்போம்தேசத்தை விற்றிட அனுமதியோம்
வாழிய செந்தமிழ்வாழ்க நற்றமிழர்வாழிய பாரத மணித்திரு நாடுவந்தேமாதரம்!
— கி.ரமேஷ்