‘வாட்டர் மிலான்’வியாபாரி
‘வாட்டர் மிலான்’வியாபாரி தம் கடையில் ‘ஒன்றின் விலை 30ரூ.மூன்றின் விலை 100 ரூ’என விளம்பரப்படுத்தியிருந்தார்.
எல்லாரும் ஒவ்வொன்றாக மூன்று காய்கள் வாங்கி ,பத்து ரூபாய் லாபப்படுத்தியுள்ளோம் என்ற அகங்காரத்துடன் சென்றனர்.
ஒரு இளைஞன் அவரிடம் ,”நீங்கள் மூன்றின் விலை 100 என எழுதிவைத்துள்ளீர்கள்.நான் 90ரூக்கு மூன்று வாங்கிவிட்டேன் அல்லவா?உங்களுக்கு பிஸ்னஸ் தெரியவில்லையே”என்று கூறினான்.
அவன் போனபின் கடைக்காரர்,”இப்படி எழுதியதால்தான் 10 ரூ லாபப்படுத்துவதற்காக எல்லாரும் முன்று காய்கள் வாங்கினர்.இன்று எல்லாம் வேகமாக விற்றுவிட்டன”என மனதிற்குள் நினைத்தார்.
பிறர் தேர்ந்தெடுக்காத ஸ்டைல்களையும் அணுகுமுறைகளையும் பின்பற்றுவோர்களுக்கு மட்டுமே உயரங்களை அடைய இயலும்.
காலத்திற்கு ஏற்ப மாற்றம் தேவை.இல்லை என்றால் இருந்த இடத்திலேயே இருக்கவேண்டிய நிலையே ஏற்படும்.
Tags: 'வாட்டர் மிலான்' வியாபாரி