பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் அமைப்பின் சார்பில் கடற்கரை சுத்தப்படுத்தும் பணி
பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் அமைப்பின் சார்பில் கடற்கரை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மனாமா :
பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா நகரில் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ்
(சமூக உதவி இயக்கம்) சார்பாக கடற்கரை சுத்தம் செய்யும் சமூக நற்பணி சல்மான் சிட்டி பீச்சில் 29.07.2022 வெள்ளிக்கிழமை காலை நடந்தது.
இந்த தன்னார்வ பணியில் உறுப்பினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கலந்து கொண்டு கடற்கரை சுத்தப்படுத்தும் சேவையில் ஈடுபட்டனர்.
சுத்தப்படுத்தும் பணியை சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த காயி மீதிக் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் என்ற சமூக உதவி இயக்கம் அமைப்பின் நிறுவனர் தக்கலை செய்யது ஹனீஃப் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்