துபாயில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 14.03.2012 புதன்கிழமை மாலை 8.45 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.
துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. அதனைத் தொடர்ந்து முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் காக்கா பயணம் எனும் தலைப்பிலான தொடர் சொற்பொழிவின் மூன்றாம் பாகத்தை வழங்கினார்.
நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
Tags: சொற்பொழிவு நிகழ்ச்சி