நாளிதழ்
உன்னை காதலுடன் கரம்பற்றுவதில் அப்பாவிற்கும் அவரின் அன்புச்சகோதரர்தளுக்கும் அதிகாலையிலேயே சண்டைமூட்டுவாய்!
கட்டியவளின் கூற்றுகளை காதில் வாங்காமல் காபியுடன் கண்ணிமைக்காமல இருக்கும் அப்பாவுடன் கைகோர்த்திருப்பாய்!
விண்ணைத்தொட்ட செய்தியிலிருந்து மண்ணைதொட்ட செய்திவரை விவரமாக விமர்சித்தபின் வெளியுலகிற்கு வருவாய்!
மாதிரிவினாவிடையை
வாரந்தோறும் வாஞ்சையாய் வாங்கித்தருவாய்!
யார்?எங்கே?ஏன்?எப்போது?எப்படி?
படப்பெட்டியிலும்,பண்பலையிலும் பிரியமான படப்பாடல்களை பட்டியலிட்டு பிரசுரப்படுத்துவாய்!
சிறுவர்கள் சிறகடித்து பறக்க உன் இனிய குழந்தைகளை இலவசமாய் இன்முகத்தோடு
இணைப்பாய்!
இளைஞர்கள் எழுச்சியோடு ஏற்றம்பெற எட்டுத்திக்கும் சரசரக்கும் சாதனைகளை சமர்த்தாய் சாதகமாக்குவாய்!
கனவுநாயகர்கள் மட்டுமல்லாது நிஜநாயகர்களின் நகைக்கும் சித்திரங்களால் சிலிர்க்கவைப்பாய்!
காளையர்களை கவிஞர்களாக்கி உனக்கு கவிதை கோர்க்கவைப்பாய்!
அடுப்படியில் அடைந்திருக்கும் அன்னையர்களுக்கு அண்டத்தைகாட்ட புதிர்போடுவாய்!
குழந்தைதொழிலளர்களின் கொடுமையை கூறினாலும் ஒர் குழந்தை தொழிலாளிதான் உன்னை என்னிடம் சேர்க்கிறான்!!
– அபிநயா