ஹஹ்ஹா..ஹஹ்ஹ்ஹா

Vinkmag ad

ஹஹ்ஹா..ஹஹ்ஹ்ஹா
யாரிடமிருந்து
இந்த வெறிச்சிரிப்பு என்று
பார்க்கிறீர்களா?
ஒரு சகமனிதன்..
அதுவும் மனிதர்களின்
உயிரைக்காப்பாற்றும்
ஒரு மருத்துவன்..
அவனை நான் பழி தீர்த்து
பிணமாக்கினேன்.
ஆனால் உங்களை
அவன் மீதும்
பாய்ந்து தாக்கும்
மிருகங்கள் ஆக்கிவிட்டேன்
பார்த்தீர்களா!
கடவுளையும் பூட்டி
சாவியை
என் விரல் நுனியில் தான்
சுழற்றிக்கொண்டிருக்கிறேன்.
ஆம்.
மனிதா!
இந்த அச்சம் தான்
என் உடைமையடா!
உன் ஆயிரம் மருந்துகள்
எனக்கு துச்சமடா!
…………..
இப்படிக்கு
கொரானா வைரஸ்.

===========================ருத்ரா

 

News

Read Previous

ஆபத்து ! ஆபத்து !

Read Next

மாண்புமிகு நோன்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *