வேண்டாம் ஏளனம்!
வேண்டாம் ஏளனம்!
********
* உன்னிடம் தோற்றவனை
ஏளனம்செய்யாதே; அவன்தான்
உனக்கு ‘வெற்றியாளன்’
என்று பட்டம் கொடுத்தவன்!
* உன்னிடம் கையெந்துபவனை
ஏளனமாக பார்க்காதே; அவன்தான்
உன்னை ‘வள்ளல்’ என
வாழ்த்துவதற்கு தயாராக வந்தவன்!”
* உன்னிடம் ஏமாந்தவனை
ஏளனமாக நினைக்காதே; அவன்தான்
உன்னை ‘சத்தியவானாக’ நம்பியவன்!
* உன்னிடம் சந்தேகம் கேட்பவனை
சலித்துக் கொள்ளாதே ; அவன்தான்
உன்னை ‘அறிவாளியாகக்’ கருதியவன்!
* ஏழைகளின் சிரிப்பை எள்ளி
நகைக்காதே; அவர்களது பொறுமைதான்
உன்னை ‘வசதி படைத்தவனாக’
இன்னும் வைத்திருக்கிறது!
இரா.சுந்தரமூர்த்தி படையாச்சி