விவேக்

Vinkmag ad

பூமியில் நீ நட்ட மரங்கள் இன்னும்
உயிரோடு இருக்கையில்
நீ மட்டும் எங்கே சென்றாய் …

துக்கத்தில் இருப்பவன்கூட
உன்னை திரையில்
கண்டுவிட்டால்
குலுங்கி குலுங்கி
சிரித்தானே அதெப்படி …

துயரக்கடலில் தத்தளித்த நாங்கள் உன் சிரிப்பலையால்
மீட்கப்பட்டு
ஆனந்த எல்லையில்
கரை ஒதுங்கினோம்
அதெப்படி …

மரணவாசலில்
இருப்பவன் கூட
உன் நகைச்சுவையை
பார்த்துவிட்டு
ஆயுளை சில நாள்
நீடித்து கொண்டான்
ஆனால் நீமட்டும் ஏன்
அதை
சுருக்கிகொண்டாய் …

திரைத்துறையில் கலைவாணருக்கு
பிறகு உன் பகுத்தறிவு
கருத்துகூறி மூடநம்பிக்கையை முடமாக்கினாய்
மக்களை தெளிவாக்கினாய் …

உன்னை இழந்து பூமித்தாய் கதறி அழுவதால் இன்று எல்லா மரங்களும் ஒன்று சேர்ந்து துக்கம் அனுசரிக்கின்றன…

சிரித்தே பழக்கப்பட்ட
பூக்களெல்லாம் இன்று
அழுகையில் நனைகின்றன …

இப்போது அத்தனை
மரங்களின் இலைகளும் சிந்துவது மழைநீர் அல்ல உன் இழப்பை
எண்ணி விடும் கண்ணீர் …

– கு.இரவிக்குமார் –

News

Read Previous

சின்னக் கலைவாணரே …………

Read Next

நடிகர் விவேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *