வாழ்வாங்கு வாழ்தல்

Vinkmag ad
வாழ்வாங்கு வாழ்தல்  
 
முறையான வாழ்க்கையும்  -நேர் 
மறையான எண்ணமும்  
அறவழி  நிற்றலும் 
அருள்மொழி கற்றலும் 
பிறர்மனம் நோகா 
முறையினிலுரைத்தலும் 
பிறர்பொருள் விழையும்  
பிறழ் நெறி அகற்றலும்
 
மடமையைக் கொய்தலும் 
கடமையைச் செய்தலும் 
பொறுமையைக் காத்தலும் 
பொறாமையகற்றலும் 
சிறுமை தவிர்த்தலும் 
பெருமையை நல்குமே .   
 
ஆத்திகராயினும் 
நாத்திகராயினும் 
அகமதில் தூய்மை 
சுகமது நல்குமே . 
 
வையந்துளோர்க்கு நாம் 
உதவிடல் வேண்டும் 
வையத்துளோர் நம்மைப் 
போற்றிடல் வேண்டும் 
வையத்துள்  வாழ்வாங்கு 
வாழ்ந்திடல் வேண்டும் 
வையத்துளோர் மனதில் 
வாழ்ந்திட வேண்டும். 
 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 

News

Read Previous

உன்னால் முடியுமா தம்பி?

Read Next

தமிழில் பேசி ஆங்கிலேய நீதிபதியைத் திணறடித்த ஆறுமுக நாவலர்! பிறந்ததினச் சிறப்புப் பகிர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *