வாழ்வாங்கு வாழ்தல்
வாழ்வாங்கு வாழ்தல்
முறையான வாழ்க்கையும் -நேர்
மறையான எண்ணமும்
அறவழி நிற்றலும்
அருள்மொழி கற்றலும்
பிறர்மனம் நோகா
முறையினிலுரைத்தலும்
பிறர்பொருள் விழையும்
பிறழ் நெறி அகற்றலும்
மடமையைக் கொய்தலும்
கடமையைச் செய்தலும்
பொறுமையைக் காத்தலும்
பொறாமையகற்றலும்
சிறுமை தவிர்த்தலும்
பெருமையை நல்குமே .
ஆத்திகராயினும்
நாத்திகராயினும்
அகமதில் தூய்மை
சுகமது நல்குமே .
வையந்துளோர்க்கு நாம்
உதவிடல் வேண்டும்
வையத்துளோர் நம்மைப்
போற்றிடல் வேண்டும்
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்திடல் வேண்டும்
வையத்துளோர் மனதில்
வாழ்ந்திட வேண்டும்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்