வரதட்சணை
வேசிக்குக் கூட….
|
திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com 0097466928662 |
- வேசிக்கு கூட
பணம் கொடுத்துதான்
அனுபவிக்க போகிறான்!
ஆனால் இந்த பாவி
வாழ்வில் தன்னை நேசிக்க வருபவளிடம்
வரதட்சணை கேட்டு யாசிக்கிறான்!
- கந்து வட்டிக் காரன் கூட
தான் தந்தற்கு அதிகமாகத்தான்
காசு கேட்கிறான் !
கரும்பாய் தன்னை
தந்து விட்டவளிடமே
இவன் காசு பறிக்கிறான்
- நீ ஒன்றும்
அவளுக்கு வாழ்க்கை கொடுக்கவில்லை!
வாழ்க்கையை
இருவரும் சமமாக பகிர்ந்து கொள்கிறீர்கள் !
- உனக்கு
அவள் துணி துவைக்கிறாள் !
உனக்கு
அறுசுவை உணவு சமைக்கிறாள்!
- முத்தம்
கொடுக்கிறாள் !
முற்றும்
தம்மையே கொடுக்கிறாள்!
- பிள்ளை
பெத்து கொடுக்கிறாள்!
ஆம்
தன்னையே செத்து கொடுக்கிறாள்!
- கைக்கூலி
வாங்குபவர்கள்
கருணை
இல்லாதவர்கள் !
- காருனின் பேராசையின்
` வாரிசுகள் !
சொரணை இல்லாத அவர்கள்
சொர்க்கம் செல்ல இயலாதவர்கள்!
- கோடி பவுன்
நகையாய் இருந்தாலும்
ஒரு துளி நீர் குடிக்க – அது
தந்ததில்லை !
அதை தேடி நாடி
போன குடிகள்
அழியாமல் இருந்ததில்லை !
- நகைகள் பீரோக்களுக்குள்
இதுவரை
வீடு விட்டு வீடு
மாறி கொண்டே வருகிறது !
ஆனால்
அதனால் ஏற்பட்ட
பகைகள் மட்டும்
இன்னும் வீடுகளுக்குள்
எரிந்து கொண்டுதான் இருக்கிறது!
****************************************************************************************
Top of Form