வரதட்சணை

Vinkmag ad

வேசிக்குக் கூட….

 

 

 

 

 

திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தர்

thahiruae@gmail.com

0097466928662

 

 

  • வேசிக்கு கூட

பணம் கொடுத்துதான்

அனுபவிக்க போகிறான்!

ஆனால்  இந்த பாவி

வாழ்வில் தன்னை நேசிக்க வருபவளிடம்

வரதட்சணை கேட்டு யாசிக்கிறான்!

 

 

  • கந்து வட்டிக் காரன் கூட

தான் தந்தற்கு அதிகமாகத்தான்

காசு கேட்கிறான் !

கரும்பாய் தன்னை

தந்து விட்டவளிடமே

இவன் காசு பறிக்கிறான்

 

  • நீ ஒன்றும்

அவளுக்கு வாழ்க்கை கொடுக்கவில்லை!

வாழ்க்கையை

இருவரும் சமமாக பகிர்ந்து கொள்கிறீர்கள் !

 

  • உனக்கு

அவள் துணி துவைக்கிறாள் !

உனக்கு

அறுசுவை உணவு சமைக்கிறாள்!

 

  • முத்தம்

கொடுக்கிறாள் !

முற்றும்

தம்மையே கொடுக்கிறாள்!

 

  • பிள்ளை

பெத்து கொடுக்கிறாள்!

ஆம்

தன்னையே செத்து கொடுக்கிறாள்!

 

  • கைக்கூலி

வாங்குபவர்கள்

கருணை

இல்லாதவர்கள் !

 

  • காருனின் பேராசையின்

`     வாரிசுகள் !

சொரணை இல்லாத அவர்கள்

சொர்க்கம் செல்ல இயலாதவர்கள்!

 

 

  • கோடி பவுன்

நகையாய் இருந்தாலும்

ஒரு துளி நீர் குடிக்க  – அது

தந்ததில்லை !

அதை தேடி நாடி

போன குடிகள்

அழியாமல் இருந்ததில்லை !

 

  • நகைகள் பீரோக்களுக்குள்

இதுவரை

வீடு விட்டு வீடு

மாறி கொண்டே வருகிறது !

ஆனால்

அதனால் ஏற்பட்ட

பகைகள் மட்டும்

இன்னும் வீடுகளுக்குள்

எரிந்து கொண்டுதான் இருக்கிறது!

****************************************************************************************

Top of Form

 

News

Read Previous

இணையத்தால் இணைவோம்

Read Next

ஆபத்தான மின்கம்பத்தை மாற்றக் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *