மே தின சிறப்புக் கவிதை

Vinkmag ad

 

இதோ ஒரு காக்கா கதை !

( கவி சேலம் கே. பஷீர் )

 

 

ஒட்டிய கன்னங்களும்

உட் குழிந்த கண்களும்

பரட்டைப் பஞ்சுத் தலையுடனே

வேப்பமரத் தடியினிலே ………

 

 

பருப்பு மசால் வடையினைப்

பாட்டி பாங்குடன் சுட்டனளே ! – வாசமதை

இருப்புக் கொள்ள முடியாமலே

வடை ஒன்றை வாய்விட்டுக் காகம் கேட்டதே !

 

 

காசேதுமில்லாமல் வடை

லேசாய் கிட்டிடுமா ? என்றனள் – பாட்டி !

மாசேதுமில்லாமல் நான்

பேஷாய் உழைப்பேன் என்றது – காகம் !

 

 

சுள்ளி விறகினைப் பொறுக்கி வந்து

சுருக்காய்த் தந்திடுவேன் – கூந்தலை நீ

அள்ளி முடிப்பதற்குள் காகம் நான்

அழகாய் வந்திடுவேன் பார் !

 

 

அழகில்லா அண்டங்காக்கை – தனது

அலகால் ஊழியஞ்செய்து

உழைத்தால்தான் உணவு என்றுணர்ந்து

ஊக்கத்துடன் வடையுடன் சென்றமர்ந்ததே !

 

 

 

ஏய்த்துப் பிழைக்கும் தொழிலையே

எடுத்தாளும் தந்திர நரி – சிரம்

சாய்த்து, ‘எழில் மிகுக்காக்கையே – நீ

பாட்டொன்று பாடு’ என யுத்தி செய்தது !

 

 

புறஞ்சொல்லித் திரிபவனையும்

முகத்துக்கு நேரே புகழ்பவனையும்

திறம் பேசிக் கலகமிட்டுத் திரிபவனையும் – இந்த

செகமீதில் நம்பக் கூடாதென நினைத்தது காகம் !

 

 

 

கஷ்டப்பட்டுழைத்துப் பெற்ற அமுத வடையை – அதே

கூட்டினுள் பத்திரமாகப் பதித்தது’ – நரியே நீ

நஷ்டப்பட்டுப் போக வேண்டும் – நிஜமாகவே

பாடப்போகின்றேன்’ என்றது காகம் !

 

 

 

ஏமாற்றமடைந்த எத்தன் நரி – காக்கையை

முறைத்துப் பார்த்தது கடுகடுப்புடனே !

’தடுமாற்றம் வேண்டாம் தன்மானத்துடன்

உழைத்துச் சாப்பிடுக!’ – என்றுரைத்தது காகம் !

 

 

 

உழைப்பின்றி வராது வெற்றிகள் – கடின

உழைப்பிற்கினை ஏதுமில்லை – நாட்டில்

உழைத்தோரே உயர்ந்தார்கள் – எனவே

உழைக்க வாரீர்  தோழர்களே !

 

 

நன்றி : இனிய திசைகள் : மே 2007

News

Read Previous

விழிப்புணர்வு வரிகள்

Read Next

கன்னல் நபி வாழ்வின் கால வட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *