மேரி மாதா
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று
🎼
எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா..
பரிசுத்த ஆவியாலே
வர புத்திரன் ஈன்ற தாயே
பிரபு ஏசுநாதன் அருளால்
புவியோரும் புனிதம் அடைந்தார்
எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா..
நிலை மாறி வந்ததாலே
நகைப்பானதே என் வாழ்வே
கணமேனும் சாந்தி இலையே
அனுதினமும் சோதியாதே
எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா..
படம்: மிசியம்மா
〰️〰️〰️🕯️🎈🎉〰〰️〰️
முத்தான முத்தல்லவோ
தச்சனுக்கு பிள்ளையென்றும் தாயொருத்தி கன்னியென்றும் இச்சனங்கள் சொன்னாலும் அவர் இறைவனது திருக்குமரன்!
கவியரசர் கண்ணதாசன், இயேசு காவியம்.
Tags: மேரி மாதா