மேதகு அப்துல் கலாம் அவர்களே!
மேதகு அப்துல் கலாம் அவர்களே!
மனிதகுல மாணிக்கமாய்
நீங்களே எங்கள்
மனங்களின் கதிர் வீச்சு.
ஏவுகணைகள் வெறும் தளவாடங்களே.
வல்லரசு எனும் அடைமொழிக்கு
வலுவான அர்த்தம் சேர்ப்பது
உலக மானிடத்தின் ஆளுமையே!
அதைத்தானே
நீங்கள் கனவு காணச் சொன்னீர்கள்.
இவர்கள் இன்னும்
சாதி மத பஞ்சடைத்த
மெத்தை தலையணைகளை அல்லவா
தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
கண்ணிலா நீங்கள் சொன்ன கனவு பூத்திருக்கிறது?
இந்த மண்ணில் அல்லவா
அதன் பார்வை நரம்புகள் பின்னப்பட்டிருக்கின்றன.
அதைக் “குறி”யிட்டுத் தான்
நீங்கள் அந்த தங்கச்சி மடத்தின்
பேக்கரும்பில்
மண்ணின் குழிக்குள் படுத்துக்கொண்டீர்களோ?
குவாண்டம் மெக்கானிக்ஸில்
எலக்ட்ரான்கள் கண்ட கனவுகளே
“ஹிக்ஸ் போஸான்”களாய்
இந்த பிரபஞ்சத்தின்
அகராதியையே புரட்டிபோட்டுக்கொண்டிருக்கின் றன.
ஓ!இளைஞர்களே!
ஒரு புதிய விஞ்ஞானம்
இமை திறக்கட்டும்.
இந்த வாட்அப்ஸ் எல்லாம்
அந்த விண்ணில் நட்டுவைத்த மைல்கற்களே.
அதையும் தாண்டிய ஒரு புள்ளியில்
அவர் காட்டிய கனவு
உங்களை கண்சிமிட்டி அழைக்கிறது.
\அக்கினிசிறகுகளை உதிர்த்துவிட்டு போய் இருக்கும்
அந்த “ஃபீனிக்ஸ்” மீண்டும்
உங்கள் சிந்தனைகளில் கருத்துகளில்
சிறகடித்துப்
படபடத்துக்கொண்டிருப்பதை
நீங்கள் இன்னும் உணர்ந்துகொண்டிருக்”கலாம்!”
ஆம்
இனிமேல் அவரே
நம் கனவு!
============================== =============ருத்ரா இ.பரமசிவன்
Tags: மேதகு அப்துல் கலாம்