மாமறையோர் மருந்து

Vinkmag ad

மாமறையோர் மருந்து

 

ஹாஜி மு. ஹிதாயத்துல்லா

இளையான்குடி

 

 

திருமறையே மருந்தென்று

தெரியுமா செகத்தீரே !

அருள் நபியின் வாழ்வியல்

அதன் விளக்கம் அறிவீரே !

 

விக்ரஹ வணக்கமென்னும்

விழுப்புண்ணாம் தீக்காயம் !

துப்புரவு ஆவதற்கு

தூயமறையே மருந்தாகும் !

 

தொலையாப் பெரும் பிணிக்கும்

தொடர்கின்ற வன்பிணிக்கும்

எழிலார் திருமறையே

ஏற்புடைய மருந்தென்பேன் !

 

இதய நோய்க்கும் குர்ஆனே

இனியதோர் மருந்தெனலாம் !

மதுர மறையின் வாசகங்கள்

மருந்தாய் மின்னும் சாசனங்கள் !

 

 

மன்னிப்பு வழங்கிவிடு !

மனக்காயம் ஆறிவிடும் !

எண்ணிக்கொள் மானிடனே !

என உணர்த்தும் மறை மருந்து !

 

தொழுகையே மருந்தென்று

தூயநபி உரைத்திடுவார்

எழிலாய் சுகம் காண

எல்லோரும் பேணிடுவீர் !

 

நாற்பெத்தெட்டு முறை

ஆயத்துல் குர்ஸியை

நலமாய் நாமோத

நகரும் எல்லா நோய்களென

நல்லார் உரைத்திடுவர் !

 

 

மூல நோயின் முற்றல் தணிய

ஸூரா தஹரை ஓதுதல் நலமே !

 

காய்ச்சலின் கடுமை

கழன்று வீழ

ஸூரா இன்பிதார்

துணையாய் அமையும் !

 

விஷப் பூச்சிக் கடி

வேதனை நீங்க ….

ஸூரா இன்ஷிகாக்

ஓதுங்கள் போதும் !

 

 

கால்கள் வலியா ….. உங்களுக்கு ?

கவலை வேண்டாம் ! குர் ஆனின்

ஸூரா அஃலாவை ஓதிடவே

சுகமே காண்பீர் மானிடரே !

 

மூத்திரக் கோளாறா …….?

முகம் சுளிக்க வேண்டாமே !

ஸூரா பல்(த்)தை ஓதிடுவீர்

சுகமே தெரியும் உணர்ந்திடுவீர் !

 

மயக்கமே வந்து

மனதில் கலக்கமோ….?

தயக்கம் வேண்டாம்

ஓதுவீர் ஸூரா ஷம்ஸே !

 

கக்குவான் இருமல்

கடும் வயிற்று வலியும்

குணம் பெற வேண்டுமெனில்

குறித்துக் கொள்ளுங்கள்

ஸூரா இன்ஷிராஹை

ஓதி ஊதினால்

ஜோராய் குணமே

தெரியும் ஆமாம் !

 

உடம்பில் அரிப்பா…?

சொறிகள் சிரங்கா …?

கவலை வேண்டாம்

ஸூரா கத்ரை

இறையருள் வேண்டி

இனிதாஅய் ஓதக்

குறையெலாம் தீரும் !

குற்றமும் நீங்கும் !

 

 

வாத நோயின்

வாட்டம் தீர

ஸூரா ஸில்ஸால்

சீராய் ஓதுவீர் !

 

ஐயோ …….. தலைவலி

என்றே பயமா ……?

ஸூரா அஸ்ரை

ஓதிட நலமே !

 

கண்நோய் நீங்கக்

கவலை வேண்டாம்

ஸூரா ஹுமஸா

ஓதியே தொடரக்

கோரிய பலன்கள்

கோடி கிடைக்கும் !

காரியசித்தி

கண்டிப்பாய் நடக்கும் !

 

 

ஸூரா குறைஷை

ஓதினால் போதும்

யார்க்கும் சிறுநீரகக்

கோளாறில்லை !

 

ஸூரா கவ்தர்

கண்வலி போக்கும் !

ஸூரா இஃலாஸ்

இருமலை நீக்கும் !

 

 

வாரீர் வாரீர்

திருமறை யோதி

வாட்டம் தீர்த்து

வளமே காண்போம் !

 

தீனே மருந்தாகும்

தீன் தந்த மறையினிலே

தேனும் மருந்தாகும்

பொய்யில்லை கண்டீரே !

 

 

( வஹியாய் வந்த வசந்தம் நூலிலிருந்து )

 

 

 

News

Read Previous

நல்லதோர் வீணை செய்தே

Read Next

சிரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *