மாட்டுக்கறி அரசியல்

Vinkmag ad

#மாட்டுக்கறி #அரசியல்

மநுதர்ம தந்திரத்தால் வேஷம்
போடுறான்-இவன் மனிதநேய
கோஷம் போட்டு மகுடி ஊதுறான்!

பசுவுக்காக பாரதத்தை பங்கு
போடுறான்-அதில்
பார்ப்பனியத்தை எரியவிட
தூபம் போடுறான்?

இவன் குடிக்கும் நெய் முழுக்க
தெய்வ பக்தியாம்-ஏழை ஜனங்க
உன்னும் இறைச்சி மட்டும் பாவ
சக்தியாம்!

கோடிக்கணக்கில் ஏற்றுமதிக்கு
தடைகள் இல்லையாம்!-
ஓடி உழைக்கும் மக்கள் உன்ன
தகுதியில்லையாம்??

மாடிவீட்டுக்காரனெல்லாம்
மட்டன் திங்குறான்-
மலம் அள்ளும் மனிதன் ஏனோ
மயங்கி கெடக்குறான்!

மந்திரத்தை சொல்லிச்சொல்லி
மயக்கப் பாக்குறான்!-புது
மதச்சாயம் பூசிப்பூசி நம்மை
மடையனாக்குறான்!

மதவாத சக்தியெல்லாம்
மிரட்டிப் பார்க்குது-ஒரு
மயிருக்காகா விசயத்துக்காக
ஜனங்க மரித்துப்போவுது?

மதுவாலே மக்களெல்லாம்
மாய்ந்து போகுது-இந்த
மானங்கெட்ட அரசியலால்-நாட்டின்
மானம் போவுது??

இந்துத்துவா கொடியக்காட்டி-
நாட்டை ஆளுறான்!-கொடிய
இறையாண்மை கூச்சல்போட்டு
மாட்டை மேய்க்குறான்!

இழிவான பேட்டி கொடுத்து-நம்மை
இழுக்கப் பார்க்குறான்-தனி
இந்தியாவின் இனங்களையே
அழிக்கப் பார்க்குறான்??

இரத்தக்காவு கொடுப்பதற்கு
இரயிலை எரிக்குறான்!-இந்த
இரகசியத்தை சொல்பவனை
வெட்டிச் சாய்க்குறான்?

இந்தியாவை வந்த விலைக்கு
விற்கப் பார்க்குறான்-இவன்
இரத்தப் பசிக்கு நம்மையெல்லாம்
அழித்துக் குடிக்குறான்???

காவு கேட்கும் கடவுளுக்கு
கிடாய் வெட்டுறான்!-குடிக்க
கஞ்சிக் கேங்கும் ஏழைகளை
நசுக்கப் பார்க்குறான்!

காவி வேட்டி கட்டிக்கொண்டு
கழுத்தை அறுக்குறான்!-ஒரு
கடமைக்காக கண்டதையும்
உண்ணச் சொல்லுறான்??

எங்கவீட்டு அடுக்களைக்குள்
எட்டிப் பார்க்குறான்!-எளிய
எறும்புகளை பிடித்துக் கொன்று
எதிர்ப்பைக் காட்டுறான்!

ஏழு கோடி மக்களையும் ஏய்க்கப்
பார்க்குறான்!-தினமும்
ஏடாகுடமாய் பொய்யைச்சொல்லி
எள்ளி நகைக்கிறான்???

ஆர்எஸ்எஸ் சின் அடிமையாகி
வளர்ந்து வருகிறான்!-சில
அதானிகள் ஆள்வதற்கு பெரிய
வலையை விரிக்கிறான்!

ஆட்டுக்கறியை தின்று கொழுத்து
ஆட்டம் போடுறான்!-பெண்ணை
முழு நிர்வாணமாய் ஆக்கிவிட்டு
அதிகம் பேசுறான்???

தாய் மதத்திற்கு திரும்பச்சொல்லி
தாயம் போடுறான்!-தன்
தரங்கெட்ட வார்த்தையாலே
தகுதி இழக்குறான்!

தாத்ரியிலே வீடு புகுந்து
கொலையை செய்யுறான்!-தன்
தவறை நினைத்து வருந்தக்கூட
சகுனம் பார்க்குறான்???

மாட்டுக்கறியின் மகத்துவத்தை
உணர மறுக்குறான்!-சில
மடையர்களை தூண்டிவிட்டு
மௌனம் காக்குறான்!

மதசார்பற்ற நாடு என்று
நீட்டி முழங்குறான்!-இவன்
மதம்பிடித்த யானைப்போல
தெருவில் திரிகிறான்???

சங்க் பரிவார் தரித்திரங்கள்
நாட்டில் திரியுது!-போதை
சாமியார்களின் மடங்களாகி நாடு
சந்தி சிரிக்குது!

சத்தியத்தின் போதனையை
மறைக்கப் பார்க்குது!-இதனை
சாதனைகள் என்றே சொல்லி
சங்கு ஊதுது???

சேரிகளை ஊரைவிட்டு
ஒதுக்கி வைக்குறான்!-ஒரு
தேரை எரிக்க மறைந்திருந்து
வேவு பார்க்குறான்!

சாதிமறுப்பு திருமணத்தை
தடுக்கப் பார்க்குறான்!-சாதி
சமத்துவங்கள் ஒழிந்து போக
சகுனியாகுறான்???

கோவில்களில் கோமாதா
பூஜை நடத்துறான்!-அதன்
மூத்திரத்தை தீர்த்தமென்று
கடையில் விற்க்குறான்!!

குரங்கைக் கூட தெய்வமென்று
தொட்டு வணங்குறான்!-ஏழை
கூலிகளை ஊருக்கு வெளியில்
நிறுத்துறான்???

எழுதுவோரை பிடித்து வந்து
கரியை பூசுறான்!-அவன்
எழுதுகோலை பிடுங்கிவிட்டு
மீசை முறுக்குறான்?

எரிந்துவிட்ட நெருப்பினிலே
எண்ணெய் ஊற்றுறான்!-இவன்
ஏகலைவன் போல நடித்து
ஏய்ச்சிப் பொழைக்குறான்???

சகிப்புத்தன்மை வேண்டுமென்று
பேட்டிக் கொடுக்குறான்!-நம்மை
சக்கையாகப் பிழிந்து விட்டு
சாகடிக்குறான்!

சனாதன தர்மத்தையே
தோற்கடிக்குறான்!-அந்த
சாக்கடையில் வீழ்ந்து போயும்
சட்டம் பேசுறான்???

ஐந்துவருட அரியணைக்கே-
இந்த ஆட்டமா?-நீ
அடக்கி ஆள நாங்கள் என்ன
அடிமைக் கூட்டமா?-எங்கள்
ஆதித்திமிரை அடக்கி ஆளும்
கழுகுக் கூட்டமே?-நீ
அழிந்து போகும் நாள் இருக்கு
ரொம்ப பக்கமே?????

_கவிஞர்.தமிழ் இலக்கியன்_

News

Read Previous

உழவனும் ஆசானும்

Read Next

ஏழு வண்ணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *