மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை – ஆம்
மறக்கத்தான் முடியவில்லை .
அந்த நாள் ,
நான் கடல் கடந்து துபாய்
வந்த நாள்
புதியதோர் நண்பரைக்
கண்ட நாள்
தற்செயலாய் சந்தித்தோம் – அது
நற்செயலாய் ஆனதுவே.
முதல் சந்திப்பிலேயே
சிவாஜிகணேசனும்
கண்ணதாசனும்
எந்த அளவு எங்கள் மனதில்
வந்தமர்ந்திருக்கின்றனரென்று
சிந்தனை முழுதும்
பகிர்ந்த நாள் .
தமிழ்த்தேரின் அறிமுகம்
பெற்ற நாள்
‘கல்வி ‘ என்னும் தலைப்பிலும்
‘புகழ் ‘ என்னும் தலைப்பிலும்
கவிதைகள் நான் எழுதித்
தந்த நாள் .
அமீரகத்தில் நடந்த
தமிழ்தேர் பவனி யில்
என் கவிதைகளும் அச்சேறிய
புத்தக வெளியீட்டு விழாவில்
அமீரகத்தில் மேடையில்
அமர்ந்த நாள் .
என் கவிதைகள்
அரங்கேறிய
சிறந்த நாள் .
என் கவிதைகளின்
மகத்துவம் உலகறியச் செய்த
மகத்தான நாள் .
கடல் கடந்து நான்
புகழ் அடைந்த
புகைப் படங்கள் கண்டு
உற்றாரும் ,உறவினரும்
உற்சாகம் அடைந்து
உளமாரப் பாராட்டிய
உயர்ந்த நாள்.
அத்தோடு முடியவில்லை
அடுத்தடுத்த இதழ்களிலும்
அனுப்பிய என் கவிதைகள்
அத்தனையும் வெளியிட்டு – சிலேடை
சித்தனென்ற என் பெயரை
முத்திரையாய்ப் பதித்து வரும்
கவிச் செம்மல்
காவிரி மைந்தரையும்
கலைச் செம்மல்
முதுவையாரையும்
மறக்க நினைக்கவில்லை .
மறக்கத்தான் முடியவில்லை. .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .
2.04.2015
rajamsethu@gmail.com