மயங்கி விட்டன

Vinkmag ad

காலை நேரம்
பாவை நான்
பறிக்கச் சென்றேன்
குண்டு மல்லி..!!!

பனி படிந்த
புல் மேல் என்
பாதத்தைப்
பதித்துச் சென்றேன்..!!!

பச்சைப் புல்லை
இச்சையோடு
தொட்டுப் பார்த்தேன்..!!

வெள்ளை நிறம்
கொண்ட மல்லிகையை
வெட்கப்படாமல்
தொட்டுச் செல்லும்
வண்டையும் பார்த்தேன்…!!

மெதுவாக என் கரம்
தொட்டுப்பறித்தேன்
கொத்துக் கொத்தாக
உள்ள குண்டு மல்லியை..!!

குயில் கூவும் குரல்
கேட்டதுமே கொல்லைப்
பக்கம் திரும்பி பார்த்தேன்..!!

குயில் இல்லை மான்
நிறத்தில் ஆழகு நிறைந்த
அந்த ஆண் மகன் என்
கண்ணில் பட்டான்..!!

பார்த்த நிமிடமே என்
கண்கள் படம் பிடித்து
விட்டது அவன்உருவத்தை..!!

பிடித்த படத்தை
பிரேம் போட்டு
மாட்டி விட்டது
என் இதயம் சிறுதும்
தயங்காமல்..!!!

மௌனமாக நின்ற
அந்த அழகன்
என்னைப் பற்றி
என்ன நினைத்தானோ
நான் அறியேன் நான்
அவனையே நினைக்கின்றேன்…!!

அவன் கரம் சேரவே ஆசைப்
படுகின்றேன் தினமும்
அவன் முகம் பார்க்கவே
துடிக்கின்றேன் அவன்
குரல் கேட்கவே தவிக்கின்றேன்..!!

மயங்கி விட்டேன் நான்
மறக்க முடியாமல்
மனதினிலே கலக்கம்
மறைத்துக் கொண்டே
இருப்பது எத்தனை
நாட்களடா…???

News

Read Previous

உயிருக்கு ஆபத்தான உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது !!

Read Next

darulumoor.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *