மனித நேயம் மலர வேண்டும்

Vinkmag ad

மனித நேயம் மலர வேண்டும்
———————————–

இயற்கைப் பேரிடர்களில் இணையும் இதயங்களால்
இன மத மாச்சரியங்கள் தாண்டி
இன்னுயிர் காத்த வரலாறு உண்டு

கொரோனா தொற்று வந்தது
உயிர்களை கொன்றொழித்தது உடலை அடக்கம் செய்ய அஞ்சி ஓடினர்
உயிரை துச்சமென மதித்து நாம் செய்தோம்

ஈமானோடு எழுந்து நின்றோம் ஈமக்கிரியைகள் செய்தோம்
நம்பண்பு அவர்களை ஈர்க்கவில்லை
நம்மை பயன்படுத்திக் கொண்டார்கள்

தூய எண்ணத்தைப் புரிந்து கொண்டும். தூய்மைப் பணியை ஏற்றுக் கொண்டும். சூழ்ச்சிகள் செய்கின்றனர். துவேஷங்கள் தொடர்கின்றன

இந்த மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன
இரு கரங்கள் இணைந்த பின்னும் இடைவெளிகள் ஏன் விரிகின்றன
இது யாரின் குற்றமோ இல்லை சாபமோ

மனிதநேயம் மலர வேண்டும்
மண்ணில் தர்மம் நிலைக்க வேண்டும். மக்கள் நலனையே பெரிதென எண்ணி மனிதா உன்பயணம் தொடர வேண்டும்

கவின் முகில் மு முகமது யூசுப் உடன்குடி

News

Read Previous

ஏந்தல் நபியே! யா ரசூலுல்லாஹ் !

Read Next

பாரதியிடம் கேட்டேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *