மக்களாட்சிமலர்ந்தநாள்
குடியரசுநாள்
மக்களாட்சிமலர்ந்தநாள்
26.01.2016
——————————
இந்திய நாடு விடுதலை பெற்றாலும்
இந்தியா மக்களாட்சித் தேரில் உலாவந்த
இந்தத் திருநாள் குடியரசு நாளாகும்!
இந்தியர்கள் நின்றார் நிமிர்ந்து.
அரசியல் சட்டத்தை அம்பேத்கார் அண்ணல்
தரமான பண்புத் தலைமையில் தந்தார்!
மலர்ந்தது இந்தியர்கள் வாழ்வில் உரிமை!
வரவேற்றது நாடே மகிழ்ந்து
மக்கள் உரிமையுடன் நல்லொழுக்கப் பாதையில்
அக்கறை கொண்டு பொறுப்புடன் நாட்டிலே
ஒற்றுமையைக் காத்தேதான் வாழவழி தந்தநாள்!
எப்பகையும் தோற்றுவிடும் பார்.
மதுரை பாபாராஜ்
Attachments area
Preview attachment 25-01-2016-1.JPG
25-01-2016-1.JPG
Tags: மக்களாட்சி