பொங்கலோ பொங்கல்..
நீங்கள் பேசப்பேசத் தான் நான்
எனக்கே தெரியக் கிடைக்கிறேன்..
எனக்கே தெரியக் கிடைக்கிறேன்..
நீங்கள் கைதட்டி கைதட்டி வளர்த்தக்
குழந்தை நான்; எனக்கு
அன்பை வாரி வாரித்தரும் உங்களின் நேரமும்
எழுத்துக்களும் –
எல்லாமே பொன்னையும்விடப் பெரிதானது..
எனக்கான தூரத்தை
உங்களின் சொற்கள்தான் அன்புகொண்டு
அளந்து காட்டுகிறது..
உங்களின் பிரதிபலன் பாராத நட்பும்
பகிர்ந்துக்கொள்ளும் படைப்புக்களும்
கருத்துரைக்கும் மின்னஞ்சலும்
பாராட்டிவரும் கடிதங்களுமாய்
எனை செதுக்கும் நல்லுணர்வுகளின்மீதும் பயணித்துதான்
உலகின் எல்லையை –
எழுத்தின்வழியே தொடமுடிகிறது என்னால்!!
அத்தனைக்கும் நன்றியானேன் அருமை நட்புறவுகளே..
எல்லோருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களும் வணக்கமும்..
பேரன்புடன்..
வித்யாசாகர்
—
Tags: பொங்கல்