பூமி அதிர்ச்சி

Vinkmag ad

பூமி அதிர்ச்சி
*********

சுவாசக் காற்றை
சூறையாடினான்

நீரை நிலத்தை நிர்மூலமாக்கினான்

பசுமைத்தாயை படுகொலை செய்தான்

வயல் காடுகளை
வரலாறாக்கினான்

குருவிகளை
குற்றுயிராக்கினான்.

மழலைகளின் பால் கூட மருவி விஷமாகிப் போக

தன் மில்லியன் வருட
வேதனை மீறி
கொஞ்சம்
குலுங்கி அழுதாள்
புண்ணாகிப் போன
பூமி மாதா.

அனுதினமும்
கொன்றொழித்து
ஆயுசெல்லாம்
அட்டூழியம் செய்த
மானுடம் சொன்னது
“பூமி அதிர்ச்சி” என்று

ஆக்கம்: S.A.C.Hameed

News

Read Previous

நான் என்ன செய்கிறேன்

Read Next

இன்னொரு அம்மாவாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *