புரட்சித் தலைவி – ஜெ.ஜெயலலிதா

Vinkmag ad

கோமலவள்ளியே கோமகள் ஆனாய்
காண்பவர் கவரும் பேரழகியானாய்
கலைகளிலும் சகலகலா வல்லியானாய்
வில்லாதி வில்லருக்கும் வில்லியானாய்
ஜெயலலிதாவாய் ஜெயம் கண்டாய்
செயல்அளித்துச் செழுமை சேர்த்தாய்
இசைக் கருவிகளையும் மீட்டினாய்
தேனிசைக் குரலிலும் பாடினாய்

மொழிகளிலோ பெரும் புலமை ஆடற்கலையிலோ சொக்கும் திறமை
பெண்ணினத்துக்கு முன்மாதிரியாய் பெருமை
திட்டங்களும் வளர்ச்சியுமோ அருமை
தனிமை துயர்துடைக்கும் கரங்கள்
அறிவாற்றல் பெருக்கும் நூல்கள்
அகங்காரமும் ஆணவமும் அரண்கள்
அழகுத்திறமையை அதிசயக்கும் கண்கள்

கூடாநட்பு கேடாய் துரோகம்
இளவயதிலும் இறுதியிலும் சோகம்
அரசியலில் குருவாய் எம்.ஜி.ஆர்
அன்பிலே இவரைமிஞ்ச வேருயார்
வழக்குகளால் நிரம்பிய வாழ்க்கை
வீழ்வதும் எழுவதுந்தரும் நம்பிக்கை
அம்மாவின் அரவணைப்புக்கு ஏங்கி
அம்மாவாய் மக்களுக்கு மனமிறங்கி
தங்கமங்கையாய் நிறைந்தாய் நெஞ்சில்
மக்களுக்காகவே நானென்ற சொல்லில்!

-அபிநயா,துபாய்

News

Read Previous

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கவிதாஞ்சலி!

Read Next

தமிழ்ச்சுவை உணர்த்தும் காணொளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *