புனித ரமலான் வாழ்த்துக்கள்
புனித ரமலான் வாழ்த்துக்கள்
அன்பை போதிக்கும் மதம் – மனிதப்
பண்பை போதிக்கும் மதம் – மனித
நேயம் போதிக்கும் மதம் -புனித
அறத்தை போதிக்கும் மதம் – இனிது
வாழ வழி காட்டும் மதம் – உலகில்
இஸ்லாம் மதம்தானே .
அல்லாவின் அருளால் அகிலம்தன்னில்
எல்லா வளமும் நிறைந்தவரெல்லாம்
இல்லாதவர்க்கு ஈந்து மகிழ
நல்லதோர் காலம் ரமலான் மாதம் .
உதயம்கா முதல் அஸ்தமனம் வரை
உண்ணாமல் , குடிக்காமல் உபவாசமிருந்து
காலம் தவறாது தொழுகை செய்து
மாலையில் நோன்பு திறக்கும் பொழுது
மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணும்
நல்லதோர் காலம் ரமலான் மாதம் .
அல்லா அவர்கள் ஆணையின் படியே
அண்ணல் நபிகள் காட்டிய வழியில்
எல்லா உயிர்க்கும் தோழமைகாட்டி
நல்லவராக வாழச் செய்வதும்
இஸ்லாமியர்கள் அனைவரும் வேறு
எந்த மதத்தவராயினும் அவரை
‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று வணங்கி
அன்பைக் காட்டுதல் அருமையன்றோ.
திருக் குர் – ஆன் தன்னை தினமும் ஓதி
திசை தனைத் தொழுது பிறை தனைக் கண்டு
மறையதன் வழியில் மனிதனாய் வாழ்ந்தால்
குறையிலாதிருக்கும் குவலயம் தானே.
இனிய ரம்ஜான்( ரமலான் ) வாழ்த்துக்கள்
அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்