புது விடியலை நோக்கி
புது விடியலை நோக்கி
புலம்பெயர்ந்து வாழ்வின்
புது விடியலை நோக்கி
வாழ்வு முழுக்க மற்றொரு
தேசத்தில் !!
சுய சிந்தனை மறந்த..
வாழ்வின் ஓட்டம்
வேறொரு ஆதிக்கத்தின்
முழு சிந்தனையும்
யாரோ நம்மை
ஆளுகிறார்கள்
அந்த பெருநிறுவங்கள்
நம் உழைப்பு எல்லாம்
கார்பெரேட்டின் வளர்சிகே.. முழு வாழவும்!!!
எதை வாங்க?
எதை சாப்பிடுவது !!
எப்படி நேரத்தை
செலவழிப்பது !! என்று
அவர்கள் தீர்மானிக்கிறர்கள்..
தகவல் திருட்டில்..
மொத்ததில் நாம்
சுய சிந்தனையற்ற
ஒரு உயிர் உள்ள
ரோபோவாக அவர்களுக்கு
செயல்படுகிறோம்!!
மகிழ்விலும், துயரத்திலும்,
இணையத்தில் கழிகிறது வஞ்சிக்கப்பட்ட
வாழ்வு!!
இத்தனை காலமாய்
ஒரு பொருட்களையும்
உருவாக்கவில்லை!!
நம் உழைப்பில்!!
எல்லா கார்பெரேட்
குப்பையும் வாங்குகிறோம்
சம்பளத்தில்
நம் பாரம்பரிய
தற்சார்பு நிலையை
இழந்தோம்!!
சம்பள அடிமையில்
அதில் மொத்த
வாழ்வும் போனது
இந்த காதித பணத்தின்
ஆசையில்!!
அந்த காகித பணமும்
ஒரு நாள் காகிதம்
ஆனது ஏன் அதும்
காகிதம் தானே?
இந்த கார்பெரேட் ஆட்சியில்
பண மதிப்பிலக்கம்
என்று – முட்டாள்தனமான.
இது தான் பெட்ரோட்ரோலார்.
பொருளியல்..பேக்ஸ் அமெரிக்கான.
நாம் தற்சார்பு பொருளியலை
நோக்கி நகர வேண்டும்.
நமது வாழ்முறையை
மீண்டும் அந்த அடிமை
உலகை நோக்கி அல்ல!!
மீட்டு எடுப்போம்
நம் சித்தாந்தத்தை
கற்று கொடுப்போம்
வரும் தலைமுறைக்கு
சுயமாக நிற்க
பொருளீட்ட நம்
நிலத்தை ஆள…
– நூர் முகம்மது–