பிறக்கும் சேய் ……….
பிறக்கும்சேய்க்குப் பால்தரும்தாயின்
பெருமைகள்சொல்லித் தீருவதில்லை!
பிறக்கும்சேய்க்குப் பால்தரும்தாயின்
பெருமைகள்சொல்லித் தீருவதில்லை!
தொப்புள்கொடியில் வளரும்உயிரில்
சொந்தமதுவே உறவின் எல்லை!!
இத்தகுசிறப்பினைப் பெற்றிட்டமாதர்
இன்றையநிலையில் மாற்றங்கள்!
தன்தளிர்அருந்த பாலதுதந்தால்
தன்னெழில்குன்றும் எனக்கருதுகிறாரே!
படைத்தவன்தானே பவித்ரமாக
பால்தரும்வடிவம் தாயிடம்தந்தான்!
இதைவிட எப்படி நம்பிக்கையாக
சேய்பெறும்நலனைக் காத்திடமுடியும்?
அன்றைய குழந்தைகள் அன்னையின்பாலை
அருந்திவளர்ந்ததால் உண்மையில் பலம்கொண்டார்!
இன்றைய மழலைகள் செயற்கைப் பாலை
வருந்தியே அருந்துவதை வாய்சொல்ல முடியுமா?
மருத்துவகுணங்கள் நோய்தடுத்திடும்விதங்கள்
அடுக்கடுக்காக நன்மைகள் அன்னைதரும்பாலிலே!
சுடரொளிகாட்டும் சூரியன்போல் பிள்ளைவளரும்
சுந்திரமுகம்காட்டும் சந்திரன்போல் தத்தித்தவழும்!
உங்களைநம்பி உலகிற்குவருகின்ற பிள்ளைமுகம்பாருங்கள்!
உதிரம்கலந்து இயற்கைதருகின்ற பாலமுதம் தாருங்கள்!
நாளையஉலகில் ஆளும்திறனுக்கு அடிப்படையிந்தப் பால்தான்!
நல்லதோர் அன்னையென்னும் நற்பெயரைப் பேணுங்கள்!!
அன்புடன்
காவிரிமைந்தன்
kaviri2012@gmail.com