பிரதிநிதி

Vinkmag ad

பிரதிநிதி-

 

நாம் உலகை ஆள

பிறந்தவர்கள்,

பிறர் சிந்தனைக்கு

அடிமை அல்ல,

அவர்களுக்கு பின்

தொடர்ந்து செல்பவர்கள்

அல்ல;

 

இதற்காக இறைவன்
படைக்கவில்லை அவனது

பிரதிநிதியாக இந்த 
உலகில் நம்மை.

 

 

இத் திருநாட்டின்

பெரும் தியாகத்தின்

சொந்தகாரர்கள்.

மிக பெரும் வரலாற்று

உடையவர்கள்;

 

 

யாரின் இசைவுக்காக

காத்திருந்து பணிசெய்ய

அவசியம்யில்லை.

நாம் இஸ்லாமிய மைய

நீரோட்ட அரசியலை

உணர வேண்டும்.

 

இவ் உலகை வழிநடத்த

வந்தவர்கள் என்பதே

உண்மை.

 

இவ்வுலகம் ஒரு பேராபத்தை

நோக்கி நகர்கிறது..

அது மனித தன்மையை

புதைக்குழியில் புதைத்து

கொண்டிருக்கின்றது…

 

 

இதை செம்மைபடுத்த

நம்மால் தான் முடியும்

ஆனால் நாம்

பெருநிறுவனங்களுக்கு

விற்பனை பொருளாக

விலை பேசப்படுகின்றோம்

மாத சம்பளத்திற்கு

அடிமையாகிறோம்

உலக ஆசையாள்.

 

பெரும் பாக்கியம்

பெற்றவர்கள், நம்மை

விலை கொடுத்த

வாங்க தகுதியும்

திராணியும், உள்ளவன் நம்மை 
படைத்த இறைவன் மட்டுமே.

 

 

நம்மால் தான் முடியும்

தேசத்தை காக்க

செம்மை படுத்த

ஏனெனில் நம்மில்

தான் ஏகத்துவ நம்பிக்கை,

சமூக நீதி மற்றும் கூட்டு நிதி

தத்துவம் இருக்கிறது.

 

 

நமது வரலாற்று

பக்கங்களை புரட்டுவோம்,

ஏனெனில் இயற்கையின்

ரகசியங்களை உலகுக்குத்

திறந்து காட்டியது யார்?

புதிய நாகரிகத்தை முதலில்

வடித்த சிற்பி யார் ?

அது நமது உம்மத்.

 

  சிந்தனையை செம்மைபடுத்துவோம்

வரும் தலைமுறை

வழிநடத்துவோம் உலகை ஆள..

கார்பெரேட் கம்பெனிக்கு

விளைபொருளாக அல்ல

 

 

  • Amt. Noor Mohamed

 

 

News

Read Previous

எனக்குப் பிடித்த திருக்குறள்!

Read Next

ஓட்டு அரசியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *