பாவேந்தர் பரம்பரை

Vinkmag ad

 

எம்.எம்.மீரான். பி.எஸ்.சி

 

ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து இரண்டில்

ஆயகலை பலவுணர்ந்து ஆள்வதற் கென்றே

வந்துதித்த “மீரான்” வளர்ந்திடும் வேளை

தந்தையும் தாயும் தரணியில் மாண்டார்.

சின்னவன் என்பினும் சிதைவிலா வண்ணம்

சென்றனன் நல்வழி. சேர்ந்தனன் மேன்மை;

கற்றவர் போற்றிடும் கல்வியும் கேள்வியும்

கற்பனை ஆற்றலும் கவிபுனைந் தாளலும்

மற்றுநற் கதைகளும் மன்றிடை முதன்மையும்

பெற்றுநற் பெருமையும் உற்றனன் உயர்வையும்;

“மின்னல் மீரான்” எனும் புனை பெயருடன்

கன்னித் தமிழுடன் கலந்திணைந் தோங்கினன்

“திருமலர் மீரான்” எனும்புனை பெயரினில்

பெருந்திறல் மிக்கவன் படைத்தவை பலவாம்;

நாடக மாக்கலும் நடித்தலும் திறமுடன்

நாடிக் கலை பல வளர்த்தலும் வென்றவன்;

இந்து முஸ்லீம் இணையநற் பாலமாய்

முந்து புகழுடை மூத்த தமிழினை

இன்ப வாழ்க்கையின் இனிய மூச்செனும்

பண்பு காத்திடும் பாங்கினை வளர்ப்பவன்;

அன்னவன் நல்வளம் நற்புகழ் பெற்றிட

அன்னை தமிழ்த்திரு நாட்டையும் போற்றிட

திண்டி வனக்குயில் திறமுறளார் தம்மினைக்

கண்டுமே வாழ்த்திடக் காண்குவீர் “மீரான் !”

 

நன்றி :

 

குயில் மாத இதழ்

மார்ச் 1973

 

News

Read Previous

நோன்பு குறித்த ஜலாலுத்தீன் ரூமியின் கவிதை

Read Next

கனிமெஸ் ஹனிஃபா வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.