பாரதியின் “குயில் பாட்டு”

Vinkmag ad
பாரதியின் “குயில் பாட்டு”  பாடுவோம்  – 10

================================================
குயில் பாட்டுப் பாடுவோம் – பகுதி -10
குயிலும் குரங்கும்!
================================================
அருளின் குரல் வரிகள்:-
•••••••••••••••••••••••••••••••••••
சென்ற வாரம் கலைமாமணி சூரியபிரகாஷ் பாடிக் காட்டிய அந்த விதத்தைக் கண்டு பலர் மகிழ்ந்தனர்.  மகிழ்ச்சியில் விம்மினர்.  இன்பத்திலே துள்ளினர்.  பாட்டு என்பது இப்படித்தான் பாட வேண்டும் என்பதற்கு ஒரு வரையறையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால், கலைமாமணி சூரியபிரகாஷ் போல பாட வேண்டும் என்று இலண்டனிலிருந்து என் நண்பர் புதுயுகன் தன்னுடைய மகனுக்கு சொன்னதாக தொலைபேசியில் பேசி மகிழ்ந்தார்.
நண்பர்களே, குயில்பாட்டு எவ்வளவு அழகாக ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி வருகிறது.  இந்த முறை ஏதோ ஒரு திறம் வந்ததால், குயிலின் பேச்சும், குரங்கின் ஒலியும் புலவருக்கு இப்போது புரிந்து வருகிறது.
இப்போது பாரதியாருக்கு அந்த நேசக் குயில், நீசக் குயிலாகத் தெரிகிறது.  அதன் அழகான குரல், இப்போது அனலாய் உள்ளது.  குயிலோ, குரங்கினைப் பார்த்து குதுகலமாகப் பாடிக் கொண்டிருக்கிறது.  அதே பாடல், எந்தப் பாடல்?  நம்முடைய நண்பர் கலைமாமணி சூரிய பிரகாஷ் பாடிப் பாடி மகிழ்ந்து காட்டுகிறாரே, காதல், காதல், காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல் இசையை விலங்கறியும், பாம்பும் கேட்டு படமெடுக்கும் என்றெல்லாம், பசப்பு மொழியில் பாட, குரங்கு மதிமயங்கி, வெறி கொண்டு தாவிக் குதிக்கிறது. தாளம் போடுகிறது.  உருகுதே, ஆகா உருகுதே, ஆவி உருகுதே என்று கண்ணைச் சிமிட்டுகிறது.  மண்ணை  வாரி இறைக்கிறது.  ஆசைக் குயிலே, என் தேவதையே, உன்மேல் நானும் காதல் கொண்டு விட்டேன்.  எனக்காக, காதல் இல்லையேல் இறந்துவிடுவதாக கூறினாயே, உன்னைப் பிரிய மனம் வருமா?  அருகிலே வா.  உனக்கொரு ஆசை முத்தம் தருகிறேன்.   காதல் மொழி பேசுவதைக் கவிஞர் கேட்டு கேட்டு கொதித்து எழுகிறார்.  கை வாளை எடுத்து குரங்கின் மேல் வீச, கனவா அல்லது அது நனவா குரங்கின் நல்ல நேரம் வாளுக்குத் தப்பி, முகத்தை சுழித்துக் காட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விடுகிறது.
அந்த மாயக்காரி கருங்குயிலும் எங்கோ மறைந்து விடுகிறது.  அந்த சோலையிலே அனைத்து பறவைகளும் மொத்தமாய் ஒலி எழுப்ப, மேலே என்ன செய்வது என்று புரியாது, தட்டுத் தடுமாறுகிறார் மகாகவி பாரதியார்.  எட்டி எட்டித் தேடுகிறார்.  அந்த குட்டிப் பிசாசு, குயில், கும்மிருட்டில் மறைந்து விடுகிறது.
The vicious kuyil In a fiery  voice with love like amruth flowing thus sang on the bow love love love.  When love is lost, When love is lost, death death death.
Music spells they say even the jungle bees.
Will sarpanch  babes upon the mother’s breast.  So, true the monkey like a drunken wild leaping on the clapping hands all love beguile  and crying.
Oh oh melts my heart my love now winking scooping out beneath the bow. Heap of mud in estacy O dear, pressure love divine my power of speech over filled with love availed thou  sang death our lot and through me into the brave one among the die of love forth with I will kiss and sought sweet enjoy.
Ah, words as these he read  at with eyes marting in a range unsheated. My sword and flungation ah can it be dream, fantasy and divinity the puny crecher left all abrupt past death and it got it.
The pearless kuyil darkest forth an out of shy.  The birds now filled the grove  with sacred notes ah ignorance eats bow and bush for the devilish kuyil I searched in way in.

News

Read Previous

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

Read Next

வரலாறு வாசிக்கமட்டுமல்ல..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *