பதர் இல்லை என்றால் பதராயிருப்போம்
பதர் இல்லை என்றால் பதராயிருப்போம்
———————————
பத்ர் போர்க்களம் பதற்றமான நிலமை
பல்லாயிரம் படையினர் அங்கே
பலவீனமாய் சஹாபாக்கள் இங்கே
படைபலம் இல்லை பயிற்சியும்யில்லை
வணிகவளம்எதிரியின்கை சென்றால்
துணிந்து தொல்லை செய்வான் என்று
வலிந்து வந்து எதிர்த்து நம்தம்
வலிமை காட்ட நினைத்தால்
வந்ததோ குரைஷியர் பெரும் படை
மண்ணில் மண்டியிட்டு அண்ணலார்
மன்றாடி மனம் கசிந்துருகி கையேந்தி
தரையில் கண்ணீர் தண்ணீராய் ஓட
தாடி நனைந்து நாடி நரம்பு வீங்க
தா வெற்றியை என்று கேட்டார்கள் தரவில்லை என்றால் தடம் புரண்ட
இவ்வுலகில் உன்னை திக்ர் செய்ய
இனியாரும் இல்லை என்றாகி விடும்
இறைவா எங்கள் மீது இரக்கம் காட்டு
இவர்களின் கரங்களை பலப்படுத்து
அபூபக்கர் வந்துஆறுதல் சொன்னார்
அழுவது ஏன் அண்ணலே எழுங்கள்
ஆர்ப்பரித்து களம் புகுவோம் எங்கும்
அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்
சிறுத்தை அலியின் வாளின் வீச்சு
சிங்கம் ஹம்சாவின் தோளின் மாட்சி
வீணர்களின் கதையை முடிக்கட்டும்
வெற்றிக் கொடி விண்ணில் பறக்கட்டும்
இரு சிறார்கள் இடையில் வந்து
பெரு வீரன் அபூஜஹில் எங்கேஎன்று
உறுவாள் கொண்டு காலை வெட்டி
மறுவாள்கொண்டு தலையைகொய்து
வன்மம் தீர்த்த வகைஎன் சொல்வேன்
வைகரையின் வெளிச்சம் நாளை
ஈமானின் விடியலைச் சொல்லட்டும்
நயவஞ்சகர் தம் சூழ்ச்சிகள் வீழ்ந்து
நல்லவர் தம் எழுச்சிகள் மிளிரட்டும்
வெண்பனி தூறலில் நுண்கதிர்
வீச்சுகள் வெற்றியை சொல்லட்டும்
விண்ணவர் வந்து வீரமாய் வீழ்த்திய
வீணர்கள் படை விரண்டோட்ட்டும்
மனங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்
மதினாவில் புதியஆட்சிஅமையட்டும்
மாநபியின் கொள்கைகள் வளரட்டும்
மாநிலத்தில் அமைதி நிலைக்கட்டும்
மாசில்லா வாழ்வியல் சிறக்கட்டும்
மு. முகமது யூசுப். உடன்குடி