நான்
நான்
தன்னிலிருந்தே தொடங்கும் இந்தத் தரணி வாழ்க்கை..
என்னை நான் அறியாமல் என்ன பயன்?
முன்னம் அறிய வேண்டியது தன்னைத்தானே
உன்னையறிந்தால் ..நீ.. உன்னையறிந்தால்…
நான் என்பது அகம்பாவம் அல்ல..
மன ஆற்றலின் மூல பிம்பம்
நான் என்பது நம்பிக்கையின் ஆணிவேர்..
நமக்குள் நாமே சுயம்பாய் எழுவது!
மண்ணில் எத்தனை மகுடங்கள் சூடினாலும்
மனதுக்குள் அடக்கத்தை வளர்ப்பவன் நான்..
எண்ணித் துணிகின்ற எதையும் செய்து
முடித்திடும் திறத்தவன் நான்..
உனக்குள் உன்னைத் தேடித்தேடி..
கிடைத்தால் அதுவே ஞானமென்பாய்
எனக்குள் என்னை ஆழ்ந்து கண்டு
உண்மை உணர்ந்தால் அங்கே நான்..
கவிஞர் காவிரிமைந்தன்
தற்போது – துபாய் – அமீரகம்
00971 50 2519693
00971 50 4497052