தொ பரமசிவனார் அஞ்சலிக் கவிதை

Vinkmag ad

தொ பரமசிவனார் அஞ்சலிக் கவிதை

தொ. ப
தமிழ்க்குடியின்
பண்பாட்டு வேர்

இளையான்குடி
சாகிர் உசேன் கல்லூரியில்
கருக் கொண்ட
திரு

எஙகள்
கல்லூரியில்
விழுதிறக்கிய
அறிவுலக ஆசான்

பாளையம் கோட்டையின்
பண்பாட்டுக் கோட்டை

பொருநை நதியில்
கரைந்து விட்ட
பொதுத் தமிழ்

வையை நதியில்
முத்துக்குளித்த
அழகர் கோவில்

தொன்மையை
உயர்த்திப் பிடித்த
குன்றிலிட்ட விளக்கு

வாழ்க்கைக்கும்
வார்த்தைக்கும்
அர்த்தப்பட்டு உழைத்த
பண்பாட்டு அசைவுகள்

சமரசம் செய்து
கொள்ளாத
சமத்துவ புரம்

அறியப் படாத
தமிழகத்தின்
அடிச்சுவட்டை
அகிலத்திற்கு
அறிமுகப் படுத்திய
கலங்கரை விளக்கு

கடவுள் இருந்தால்
கண்ணியமாக
இருக்குமென்ற
நெல்லையின் பெரியார்

வேர்பிடிக்கும்
கீழடியிலிருந்தே
வரலாற்றை
எழுதிக்காட்டிய
தமிழ்நாட்டின்
கீழடி
உங்களின்
காலடி தான்
ஆய்வாளரின்
வேரடி
இவரின்
காலடி தொடாமல்
ஓரடி கூட
சீரடியாகாது
ஆய்வடி

சமயச் சடங்குகளை
சமரசமில்லாமல்
பத்தாயிரம் அடி
நடந்தே
பதிவுசெய்த
வழித்தடங்கள்

மஞ்சளின் மகிமை
பேசிய
தாடி வைக்காத பெரியார்

விடு பூக்களாயிருந்த
தமிழ்ப் பூக்களின்
தடங்களையெல்லாம்
தொடு பூக்களாய்
தொகுத்த
விடு பூக்கள்

பரணில்
நின்று
தமிழ்தேசியம்
உரைத்த
உரைகல்

மார்க்கீசிய
மேடையில் நின்று
திராவிட தேசம்
பேசிய
மரிக் கொளுந்து

தமிழகத்திற்குத்
திராவிடமே
தலையெழுத்தென்ற
பொடி போடாத
அறிஞர் அண்ணா

தமிழின்
பண்பாட்டு வேரில்
செம்புலப் பெயல் நீராய்
கலந்து விட்ட
மானுட வியலின்
தமிழ்த் தந்தை

எந்நாளும்
எமை விட்டு
நீங்குவதில்லை
எம் கல்லூரியில்
நீங்கள்
பணியாற்றிய
தமிழ்ப் பணியை..

எம்முடனே
வைத்திருப்போம்
எந்நாளும்
உம் நினைவலைகளை

கனத்த வருத்தத்துடன்:

தலைவர் , செயலர் பொருளர், முதல்வர் & பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள்
டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி
இளையான்குடி

News

Read Previous

புதிய ஊற்று

Read Next

தொ.பரமசிவனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *