தேர்தல்!!

Vinkmag ad

தேர்தல்!!
August 12, 2010 by இமாம் கவுஸ் மொய்தீன் · உங்கள் கருத்து

 
கடந்த தேர்தல் முதல்
இத்தேர்தல் வரையிலும்
ஏற்பட்ட கழிவுகளையும்
களைகளையும் களைந்து
சனநாயகத்தைத் தூய்மை படுத்திட
சனநாயகம் அளித்திடும்
அரிய வாய்ப்பு !
சமூக விரோத சக்திகளை
இனம் கண்டு
பாடம் புகட்டிட
மீண்டும்
ஓர் சந்தர்ப்பம்!
சனநாயகக் கடமையாற்றிட
முன் வரவேண்டியவர்கள்
முன் வாராமையால்
நாற்காலிகளே
நாற்காலிகளுக்காக
மோதிக் கொள்கின்றன!
வாக்களிப்போரிலும்
பெரும்பாலோர்
மனசாட்சியை
உறங்க வைத்துவிட்டு
வாக்குச் சாவடிக்குச் செல்வதால்
நாற்காலிகளே-மீண்டும்
நாற்காலிகளை அலங்கரிக்கின்றன !!

பகுதிகள் : கவிதை · குறிச்சொற்கள் : அரசியல், கவிதை, தேர்தல்
 நன்றி:தமிழோவியம்.

 
 
அன்புடன்,
இமாம்.
 
http://thamizheamude.blogspot.com/

drimamgm@hotmail.com

News

Read Previous

நோன்பின் மாண்புகள்

Read Next

பலஸ்தீனம் – மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள் – வெ- ஜீவகிரிதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *