தேர்தல்
ஒரு மாதமாக
தண்ணீர்வராத குழாயில்
ஒரு வாரமாக
தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது!
ஓ! தேர்தல் வந்துவிட்டதா
ஆடு அடிபட்டால் கூறு போடுகிறார்கள்
மனிதன் அடிபட்டால் வழக்கு போடுகிறார்கள்
மொத்தத்தில் லாபம் சம்பாதிக்கும்
மட்டமான மனிதர்கள் மத்தியில்
நானும் ஊமையாய்!
சிறுவயதில்
சண்டைபிடித்து அமரும்
சன்னலோர இருக்கையோ
வேடிக்கைக்காக!
ஆனால்
இப்போதோ
தனிமையை தவிர்ப்பதற்காக மட்டும்!
கையெழுத்தை பாரு கோழி கிறுக்குன மாதிரி
என்று வையும் அம்மாவிடம்
எப்போதும் உரைப்பாய்
“அம்மா பாப்பா கையெழுத்து அழகாக இல்லை
என்றால்
தலையெழுத்து அழகாக இருக்கும் என்று”
நீ சொன்னதற்காகவே நம்ப தொடங்கிவிட்டேன்
என் தலையெழுத்து
அழகானது தான்
உங்களோடு இருக்கும் வரை!
எப்போது தனிமையை கற்றுக் கொண்டேனோ
அப்போதே
தொடங்கி விட்டேன்
சுற்றி இருப்பவைகளை ரசிப்பதற்கு!
உன்னிடம்
சொல்வதாய் நினைத்து
அனைத்தையும்
மேகத்திடம் சொல்கிறேன்,
உன்னிடம் சொல்ல முடியாமல் போனதற்காக!
மேகம்!
நீ
ஒருமுறை
வரைந்த கோலத்தை
மறுமுறை வரைய மாட்டாயாம்!
ஏன்
உனக்கும் என்னை போல் ஞாபக மறதியா!
நிஜங்களை
ஏற்றுக் கொள்ள
ஒவ்வொரு முறையும் கடினமாக இருக்கிறது
ஏனென்றால்
நான் இதுவரை நிழலில்(பாதுகாப்பு வட்டத்தில்) வாழ்ந்தவள்.
சிறுவயதில்
சின்ன விஷியத்திற்கெல்லாம்
அடம்பிடித்து
மகிழ்ச்சியாக இருந்தவளை
என்னுள் தேடிக் கொண்டிருக்கிறேன்
இப்போது
ஏனென்றால்
நான் வளர்ந்துவிட்டேன்!
மற்றவர்களை குற்றம்
சொல்பவர்களாகத்தான் இருக்கிறோம்!
அந்த குற்றத்தை தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று உணராமலே!
நான்
இப்படி உன்னை பற்றி சிந்தித்து கவிதை எழுதுகிறேனே!
நீ
எழுதவில்லையேஎன்று கோபித்துக் கொள்ளவில்லை
இந்த ஒன்றிலாவது உனக்கு விட்டுதரலாமென்று தான்!
பேராசை!
உன் தோலில்
சாய்ந்தபடி
ஒரு நெடுந்தூரப் பயணம்
போதும்
என் வாழ்க்கை முற்றுப்பெற!
—
என்றும் அன்புடன்,
மணிமுத்து
தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?