தூய தமிழில் பேசிடுவோம்!

Vinkmag ad

தூய தமிழில் பேசிடுவோம்!

தாய்த்தமிழ்போல் வேற்றுமொழி தமிழா உண்டோ?
தமிழிலில்லா தகுதிபிற மொழியி லுண்டோ?
நாய்மொழியைக் கற்றெழுதி பேசு கின்றாய்;
நாய்ப்போல மலம்தின்று உயிர்வாழ் கின்றாய்?
பேய்ப்போல தமிழ்க்குருதி உறிந்து விட்டு
பிறமொழியின் காலையுமேன் நக்கு கின்றாய்?
ஆய்ந்துணர்ந்து இனியேனும் கலப்பு மின்றி
அருந்தூய தமிழினிலே எழுதிப் பேசு!
ஆங்கிலமோ சமக்கிருத இந்தி போன்ற
அகிலத்து மொழிக்கெல்லாம் தமிழே அன்னை;
ஏங்கியேதான் சொல்பஞ்ச மொழியு மேற்றாய்;
எம்தமிழில் இல்லாச்சொல் எஃதி லுண்டு?
தாங்கியேதான் சொல்லொன்றுக் கிரண்டு பத்து
தரமான சொல்லிருக்க மொழியாம் வேற்றை
ஈங்குநீயும் தமிழினிலே கலப்பு செய்து
இழிவினமாய் இருந்துதமிழ் அழிக்க லாமா?

தாய்த்துணைவி கலப்பானால் போற்றி ஏற்பாய்?
தமிழைமட்டும் ஏன்கலப்பால் குதறு கின்றாய்;
சேய்ப்போல அடம்பிடித்து மொழிக்க லந்து
சிதைக்கின்றாய்; மானவெட்கம் ஏது மின்றி
சீழ்ப்பிடித்த புண்ணாக புரையு மோடி
சிந்தையின்றி நாறுகின்றாய்; வெட்கம்! வெட்கம்!
மாய்வதற்குள் திருந்தியின்றே தூய்மை யான
மாத்தமிழில் பேசிடுவீர்! அன்றேல் மாய்வீர்!

நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன்,
பெங்களூரு.

News

Read Previous

சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்

Read Next

கீழடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *