தியாகத் திருநாள் – ஈத் அல் அத்ஹா
தியாகத் திருநாள் – ஈத் அல் அத்ஹா
இறைவனின் தூதர்
ஏந்தல்நபி இப்ராஹிம்1
மறையவனின் பிரியமானவர்
ஓரிறை கொள்ளையானவர்!
மணம்முடிந்து ஆண்டுகள்
பலகடந்து பிதாவானவர்
குணம்கொண்ட நபி இஸ்மாயில்2
குலம்கண்ட சேயானவர் !
கனவின்மூலம் இறையாணை
தனயனைப் பலியிட …
வினவினார் மனையாளிடம்
மனமொத்த துணையாளிடம் !
அன்னையர் ஹாஜரா3
கண்களில் ஈரமாய் சம்மதித்தார்
திண்ணிய இறையன்பால்
வண்ணமிகு நபிப்பாலகன் ஆமோதித்தார் !
இறையாணையேற்று பலிநிறைவேற்ற
நிறை நெஞ்சுரத்தோடு நபிமுனைய…
வானவர் ஜிப்ரில்4 வருகைதந்தார்
ஆடறுத்து பலியிட ஆணை தந்தார் !
இறைச்சோதனையில் வெற்றிகண்டார்
மனித உயிர்ப்பலியை மறுத்து;
இறையன்பால் குர்பானியுடன் விளைந்த
தியாகத்தின் நாள்தான் தியாகத்திருநாள் !
குறிப்பு:
1- நபி இப்ராஹிம் ( Prophet Abraham )
2- நபி இப்ராஹிம் ( Prophet Ishmael )
3- ஹாஜரா அன்னையார் (Hajra –Wife of Prophet Ibrahim)
4- வானவர் ஜிப்ரீல் ( Angel Gabriel )
தியாகத்திருநாள் வாழ்த்துகளுடன்
மு. பஷீர், மஸ்கட்