தாய் சேய் கருவறை காயம்
தாய் சேய் கருவறை காயம்
கருவறை க்குள்
சுவாசம் தந்தாய்
உலக அதிசயம்
தோற்று போனது
அம்மா!
கருவறையில் நீ இருக்க
கடவுள் இடம் தவம்யிருந்தேன்
ஈர ஐந்து மாதம் கழித்து நீ பொறந்த
அந்த கடவுளே மகன்யென கொஞ்சி மகிழ்ந்தேன்
தாலாட்டு பாடி உறவுகளை காட்டி வளர்த்தேன்
தாய்பால் உடன் தமிழ்பால் ஊட்டிதான் நான் வளர்த்தேன்
உருண்டு புரண்டு படுத்த புள்ளைக்கு ஆகாது ன்னு தூக்கத்தை நான் தொளச்சேன்
சேலையால தூக்குகட்டி
உனக்கு ஆராரோ பாட்டு பாடி தூக்கத்த வரவைச்சேன்
பாட்டுல உலகத்தையும் பாடி வச்சேன்
சுட்ட வடு காயம் இல்லை
பட்ட வடு மாறவில்லை
மார்பு ல பட்ட பல்லு அப்படியே இருக்குது
எட்டி உதைச்ச காலு பூவா ய் தெரிச்சது
கன்னதுல கில்லுன காயம் வானவில் அதிசயமாக பாக்குது
கிழிந்த சேலை உன் நினைப்புல ஊஞ்சல் ஆடுது
மரப்பாச்சி பொம்மை ஒன்னு என்னை கண்டு ஏலனமாய் சிரிக்குது
நீ விரல்புடிச்சி நடக்கையில உலகமாய் நான் இருந்தேன்
தேனாறும் பாலாறும் உன் எச்சில் முத்த த்தில் நான் உணர்ந்தேன்
அம்மாவுக்கு காயம் ன்னு எச்சில் தொட்டு மருந்தா வச்சே
முந்தானை நீ புடிச்சி ஒளிந்து விளையாடிகையில் நிலவு வந்து விளையாடுதுனு நான் சிரிச்சேன்
உன் கால்பட்ட முள் என் இதயத்தை தச்சிடுச்சி
உன்பாதம்காயம் படும்ன்னு உன்பாததகதை நெஞ்சில் சமந்தேன்
நீ கான்மென்டு போக கால் வயிறு பட்டினியா நான் கிடந்தேன்
நீ கல்லுரி படிக்க கலகட்டு கையில் எடுத்தேன்
கல்லியானம் கட்டிபாக்க
காடு கற வித்துவைச்சேன்
மேல்நாடு போய் காசு பணம் சாம்பாதிச்ச
மாடி வீடுகட்டி அம்மா பெயரை நீ வச்ச
அம்மான்னு கூப்பிடு யில சாமி உசுரே உருகிடுச்சி
காலங்கள் ஓடிபோச் சி
என் தலைமுடி நரையாச்சி
தோள் எல்லாம் சுறிங்கிபோச்சி
நடைபயணம் தளர்நடை யாச்சி
என் உடம்பு எம் பேச்சை கேக்கல
ஒரு வேள சாப்பாடு க்கு ஏங்கி கிடக்குறேண்ட மகனே
காசு பணம் முக்கியம்னு
பொன்ஜாதி கூட்டிக்கிட்டு பேரன் பேத்தி அழைச்சிக்கிட்டு
விமானம் எறி போயிட்டான்
என்னை மட்டும் ஆனாதை இல்லத்துல சேத்துபுட்டியே சாமி
இன்னும் கருவறை காயம் ஆறல மகனே
வச்ச கண்ணு மாறல நீ திரும்பி வரும்வரை சொச்சம் உசுரும் கருவறை காயம் மும் ஆறாது மகனே !
ஆறாது மகனே!
என்றும் அன்புடன்
ரா.நா. ஜெயராமன் ஆனந்தி
துபாய் 050 7258518