தாயன்பு
தாயன்பு
🌾
உயிர்க் கெல்லாம்
தாயே உயி ராவாள்
உறவுக்கும் அவளே
என்றும் முத லாவாள்
பயிர்க் கெல்லாம் உயிர்
வாழ நீரென்றால்
படிப் படியாய் உயிர்
காக்கும் தாயன்பு
நிலை யற்ற மனிதரை
நினைத்துப் பார்க்க
இணை யற்ற
செல்வம் தாய்ப் பாசம்
வாடியமுகம் காண
வாடும் தாய் முகம்
தேடினாலும் கிட்டுடுமா
அவ ளன்ன தெய்வீகம்
கோடிக் கோடி அவள்
காலடி கொட்டினும்
நாடி டுவாள் அவள்
பிள்ளை நலமொன்றே
கண் கண்ட தேவதையே
பெற்ற அன்னை
பண் ணுயர்ந்து வணங்கிடு
காலடி மண்ணை🙏
*********
மைசூர் இரா.கர்ணன்
13 .02 .2020
*********
Tags: தாயன்பு