தாகூரின் கீதப் பாமாலை – 1

Vinkmag ad

தாகூரின் கீதப் பாமாலைகள்

தாகூரின் கீதப் பாமாலை – 1

என் ஆத்மாவை நெருங்கியவள்

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என் ஆத்மாவை நெருங்கிக் குறுக்கிட்டவள் யார்
வசந்த காலத் தென்றல் நறுமணப் புகைபோல் ?
மங்கை என்னைக் கடந்து செல்கையில்
மலர்கள் பூத்துக் குலுங்கும் நூற்றுக் கணக்கில் !

போவ தெங்கெனப் புகலாது போனாள் அவள்
பாவை இங்கு திரும்பி மீளவும் இல்லை.
கடக்கும் போது விட்டாள் ஓரக்கண் ணோட்டம்
ஏதோ தெரியாத ஒரு பாடலை முணுமுணுத்து !
மனத்தில் இது திரையிட வனத்தில் அமர்ந்தேன் !

அலையில் தள்ளப்பட்டது போல் கரை அடைந்தாள்
ஏனோ தொலைந்து போனது நிலவு அந்த வானில் !
புன்னகை யோடு உலவி வந்த பூமியில் அவள்
தன் புன்னகை ஒன்றையும் விட்டுச் சென்றாள் !
ஓரக் கண்ணில் என்னை அழைப்பதாய் எண்ணினேன்
எங்கே போனாள் ? எங்கு போய்த் தேடுவேன் ?
ஏகாந்தனாய் அமர்ந்தேன் அந்த வேதனை யோடு !

மதிமுக நோக்கில் கனவு மாயம் ஓவியம் ஆனது
என் ஆத்மா விலே எங்கோ பூமாலை வீசினாள் !
பூந்தோட்டம் போயவள் ஏதோ சொல்லிச் சென்றாள் !
பூக்கள் நறுமணம் மறையும் மிடுக்கொடு அவளுடன்,
இச்சை யெழும் நெஞ்சில், கண்கள் மூடும் களிப்பிலே
எப்பாதை யில் போனாள் ? எங்கு போய் மறைந்தாள் ?

+++++++++++++++++++

பாடல் : 192 தாகூர் தன் 22 வயதில் எழுதியது (செப்டம்பர் 1881)

+++++++++++++++++++

Source

1.  Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2.  A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

News

Read Previous

அராபிய இலக்கியங்களில் இந்தியா

Read Next

பூத்திருக்கும் புத்தாண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *