தர்ம பெருநாளே…

Vinkmag ad

அல்லாஹ்வின் திருப்பெயரால்
ஈமானின் சிந்தனைக்கொண்டு
இல்லறங்களில் இனிதாக
ஈகை பெருநாளை கொண்டாடுவோம்
உறவினர்களுடன் உறவாடி
உள்ளங்களை உற்சாகப்படுத்தி
எல்லோருக்கும் நல்லது செய்வோம் என்றெண்ணி
ஏக இறைவனின் திpருமறையை
ஐய உணர்வுடன்
தினம் ஒரு மனதுடன்
ஓதுவோம்;.. ஓதி வருவோம்.

உறவுக்கும் திக்கற்றவருக்கும்
இரக்கம் காட்டி
நம்பிக்கை கொண்டு
நற் செயல்கள் செய்வதற்கே
அல்லாஹூதலா நற்கூலி கொடுக்கிறான்
என்ற நம்பிக்கைக்கொண்டு
”ஈதுல் பித்ரு” அள்ளிக் கொடுப்போம்
தர்ம பெருநாளில்
மறு உலகிற்கு இங்கே நல்வழி செய்வோம்.

அல்லாஹ்விற்கு பயந்தும்
அவனுடைய தூதருக்கும்
கீழ்ப்படிந்து நடந்து கொள்வதால்
மறுமையை மறக்க மாட்டோம்
பகைவனையும் எதிரியையும்
நண்பனாக்கி தோள் கொடுக்கும்
எங்கள் புனித மார்க்கம்
அது தான் இஸ்லாம் மார்க்கம்
என்றும் இப்பூமியில்
நிலைத்து நிற்கும் இனிய மார்க்கம்…

முத்துப்பேட்டை. அபு ஆஃப்ரின்
najiraf@gmail.com

News

Read Previous

மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி

Read Next

மோடியின் பையிலிருந்து பூனை மெல்ல மெல்ல வெளியேறுகிறது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *