தமிழரின் சாதனைகள்
விஞ்சிடும் தமிழரின் சாதனைகள்
………..வையகம் புகழ்ந்திடும் போதினிலே
நெஞ்சினில் மிகைத்திடும் இன்பமுமே
…………நேர்மையை மதித்திடும் அன்புடனே!
இன்று மின்மடல் கண்டவராம்
,,,,,,,,,இகத்தினில் மென்பொருள் வென்றவராம்
சென்றிடும் இடங்களில் எம்மவராம்
………சீரிளம் திறமையில் எம்தமிழர்!
உழைப்பினில் இவரையே வேண்டிடுவர்
……உலகினில் உண்மையை நாடுபவர்
அழைப்பதும் தமிழரை என்பதையே
…..அறிந்தவர் உணருவர் மன்பதையில்!
பேரிடர் நேரிடும் போதினிலே
……பேருத விசெய்திடும் மானிடராம்
யாரிடம் கேட்பினும் கூறிடுவர்
….யாமறிந் தவுண்மையை ஏற்றிடுவர்!
சிறப்புடன் நேர்மையைப் போற்றிடுவர்
……செயலுடன் சொல்லையும் காத்திடுவர்
பிறந்தன் தாய்மொழிப் பற்றினிலே
…..பிறரையும் விஞ்சுவர் பாரினிலே!
-அதிரை கவியன்பன் கலாம் கலாம்