சொல்லத்தான் நினைக்கிறேன் சொர்க்கம்வேறு கிடையாதே!
அழகியலின் பால்பதிவு அடடா அவள்முகம்!
அன்பின்வழி பார்த்தால் தெரிகின்ற தேன்நிலவு!
கன்னங்கள் கவிதைசொல்ல எனையழைக்கும் ஏடன்றோ?
கருவிழிகள் எனக்காக திறக்கின்ற நூலகமோ?
இதழ்கள்பற்றி எடுத்துரைக்க ஏடுகளும் போதாதே..
இன்பரசம் வழியுதடி என்னருகே நீ வந்தாலே..
கள்ளியுந்தன் புன்னகைக்கு ஈடுசொல்ல முடியாதே..
சொல்லத்தான் நினைக்கிறேன் சொர்க்கம்வேறு கிடையாதே!
மீட்டும்யாழ் போன்றகுரல் மிதக்கவைத்தாள் தேன்கடலில்!
நாணத்தால் சிவக்கின்றாள் நங்கையவள் பூமுகத்தாள்!
கரங்களிலே மாலையிட்டாள் கன்னியெனை ஆளவந்தாள்!
உருகிநின்ற வேளையிலே உன்கனவா என்றாளே??????
கவிச்சந்திரன்
அபுதாபி
Tags: சொர்க்கம்