சுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
இந்த சுதந்திர தினம்.
இனிய தோர் தினமாகும் எந்த ஆண்டுமில்லாத ஏற்றமிகு தினமாகும்.
தாய்நாட்டிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சேயவளாம் காஷ்மீரை சேர்த்தணைத்த தினமாகும்.
நம்மிடத்தை அபகரித்து
நாளும் தொல்லை தந்து
நம்மவர் கைகொண்டே நம்கண்ணைக்குத்திவந்த
நயவஞ்சகந்தன்னை நயமாக வேரறுத்து
நம் உரிமை நிலை நாட்டி
நம் பெருமை காத்திட்ட
நற்காலம் பிறந்த தினம் .
தனிக்கொடியைநீக்கித்-.தாயின் ,
மணிக்கொடியைப் பறக்கவிட்டு ,இனிக்கவலைவேண்டாம்
மணக்குமவர்வாழ்வெனவே இணக்கமுடன் எடுத்துரைத்து ,
இணைத்துக்கொண்ட இணையில்லா நன்னாள் .இந்திய வரலாற்றில் பொன்னாள்.
காஷ்மீர மக்களின்
கனவுகள் நனவாகும் ,ஜம்முவில் இனியெங்கும்
ஜனநாயகம் தழைக்கும் ,லடாக்கிய மக்களின் லட்சியங்கள் நிறைவேறும்,
வந்தனை செய்து முழங்கு வந்தே மாதரம் என்று. வாழ்க நமது சுதந்திரம் ,
வாழ்க ஒருங்கிணைந்த பாரதம்.
அன்புடன்,
சிலேடை சித்தர்
சேது சுப்பிரமணியம்.