கார்கில் தினம்
சூலை 26. கார்கில் தினம்
சிறுநரிக் கூட்டங்கள் செருக்கோடு வாலாட்டி
சிங்கத்தின் வீரத்தால் சிதைந்திட்ட நன்நாள்!
முறுக்கிட மீசையிலா முண்டங்கள் சூழ்ச்சியின்
முறையற்ற ஆளுமையை முறியடித்த திருநாள்!
வெறுத்திடும் உலகத்தின் வேண்டாத விசமங்களை
விதைத்திடும் நாட்டினை வேரறுத்த நன்நாள்!
பொறுத்தது போதுமென பொங்கிய இந்தியா
பொருத்தமாய் பாடத்தை புகட்டிய பொன்நாள்!
வளமிக்க காசுமீரை வளைத்திடும் பேராசை
வந்திட பாகிசுதான் வரம்பற்று நடந்தனர்!
களம்கண்ட இந்தியரோ கைகொண்ட வெற்றியாய்
கார்கில் நகரத்தை கண்ணென மீட்டனர்!
உளம்மகிழ தாய்மண்ணில் உதிரத்தை சிந்தியே
உரமிக்க ராணுவம் ஓங்கிட வென்றனர்!
பளிச்சிடும் நம்கொடி பறந்திட கார்கிலில்
பனயமாய் உயிரினை பாராது வைத்தனர்!
கொட்டிடும் மழையிலும் குளிரது நடுக்கத்தில்
குலையாது தாய்நாட்டை கும்பிட்டு காத்தனர்!
நாட்டினது எல்லையில் நாள்தோறும் ராணுவம்
நாட்டுக்கு அரணாக நலப்பணி செய்தனர்!
காட்டிலும் மேட்டிலும் கடும்பசி கொண்டாலும்
கார்கில் நமதென களம்வென்று போற்றினர்!
தீட்டிய வைரமென திசைதோறும் பணியாற்றும்
தியாகத்தின் தீபங்களை தலைவணங்கி வாழ்த்துவோம்!
-ப.கண்ணன்சேகர், திமிரி. பேச 9894976159.