கழல் தொழுதல் முறையல்லவா !

Vinkmag ad

கழல் தொழுதல் முறையல்லவா ! 

 

 

     மகாதேவஐயர் ஜெயராமசர்மா 

   

 

     மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

 


          உண வூட்டும் கையதனை 
                  உதறி நிற்கும் உள்ளங்களே 
           மன முடைந்து நிற்கின்ற
                 நிலை யுமக்குத் தெரியலையா 
          தின மும்மை கண்விளித்து
                  கண நேரம் பிரியாமல்
          பிணி யனைத்தும் தான்சுமந்த
                  சுமை தாங்கி நினைவிலையா  ! 

           அணி மணிகள் கண்டாலோ
                துணி வகைகள் பார்த்தாலோ
           வகை வகையாய் வாங்கிவந்து 
                  வடி வாக்கும் மனமல்லவா 
           இரவு பகல் தெரியாது
                  எதையும் தனக் காக்காது
            நில வுலகில் உமைமட்டும்
                  நினைத்த மனம் கலங்கலாமா  ! 

            கண் இருந்து நீர்வடிந்தால்
                  புண் ணாகிப் போம்மனது 
            தண் நீரும் பருகாமல்
                   தான் உருகும் மனதங்கே 

             மண் மீது வந்தசெல்வம்

                      என் றெண்ணி வாழுமந்த 

              கண் கண்ட தெய்வமதின்

                       கழல் தொழுதல் முறையல்லவா ! 

                       

              

News

Read Previous

இந்தியா எங்கள் தாய் நாடு

Read Next

இ.பிச்சைக்கனி வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *