கலாமின் மறைவு
கலாமின் மறைவு
கை அருந்த உதிரத்தில்
கையறுநிலைக் கவிதை
கவின்ஞன் நான் எழுதுகின்றேன்
கலாமின் மறைவு பற்றி !
பிரம்மச்சாரி அப்துல் அவர்
பிரம்மனுக்கு நிகர் என்பேன்
ஏவுகணை படைப்பில் அவர்
எங்கும் புகழ் பெற்றதனால் !
இளைஞர்களே அடுத்துவரும்
தலைமுறையின் தூண்களென
உரைத்தவரின் உடல் மறைவு
உளம் நடுங்க வைக்கிறது !
விஞ்ஞானம் தன்னுடைய
வலதுபுறக் கை இழந்து
வேதனையில் நிற்கிறது
அவர் மறைவால் அழுகிறது !
இளைஞன் நான் இன்று ஒரு
இனிமைமிகு சபதம் கொண்டேன்
அப்துல் கலாம் கருத்துகளை
அகிலம் எங்கும் பறப்பிடுவேன் !
– மதன்
ecemadhan94@gmail.com