கலாமின் மறைவு

Vinkmag ad

கலாமின் மறைவு

கை அருந்த உதிரத்தில்

கையறுநிலைக் கவிதை

கவின்ஞன் நான் எழுதுகின்றேன்

கலாமின் மறைவு பற்றி !

 

பிரம்மச்சாரி அப்துல் அவர்

பிரம்மனுக்கு நிகர் என்பேன்

ஏவுகணை படைப்பில் அவர்

எங்கும் புகழ் பெற்றதனால் !

 

இளைஞர்களே அடுத்துவரும்

தலைமுறையின் தூண்களென

உரைத்தவரின் உடல் மறைவு

உளம் நடுங்க வைக்கிறது !

 

விஞ்ஞானம் தன்னுடைய

வலதுபுறக் கை இழந்து

வேதனையில் நிற்கிறது

அவர் மறைவால் அழுகிறது !

 

இளைஞன் நான் இன்று ஒரு

இனிமைமிகு சபதம் கொண்டேன்

அப்துல் கலாம் கருத்துகளை

அகிலம் எங்கும் பறப்பிடுவேன் !

–  மதன்

ecemadhan94@gmail.com

 

News

Read Previous

உற்சாகமாக இருப்பது எப்படி?

Read Next

உதவிடலாம் !

Leave a Reply

Your email address will not be published.