கலங்காதே கணவனே….

Vinkmag ad

அன்பின்
அர்த்தம் சொன்னாய்
ஆயுதம் இன்றி எனை வென்றாய்
தீராத காதல் சொன்னாய்
தினமும்
தித்திக்க செய்தாய்

இதயத்தை இடம் மாற்றினாய்
இரவுகளை
இனிதாக்கினாய்
உறங்கும் எனை எழுப்பினாய்
உள்ளத்தின் உணர்வை உளறினாய்

செல்லமாய்
செல்லம் என்றாய்
சென்று வருவேன் காத்திரு என்றாய்
பிரிவின் துயரை
புரியவைத்தாய்
பிரிந்தே சேர்வோம் என்றாய்

கண்ணீரே வேண்டாம்
கலங்காதே
என்றாய்
கண்ணீரை நீ சுமந்து
கண்களால் விடை பெற்றாய்

தொலைவில்
இருந்தும்
தொலைபேசியில் அழைக்கிறாய்
தொலைந்த இதயத்தை
தொட்டுச்
செல்கிறாய்

தொடர்கிறது நம் காதல்
காலங்கள் சென்றாலும்
காத்திருப்பேன் என்
கணவனே.
கலங்காதே…………….!

admin

Read Previous

முதுகுள‌த்தூரில் தாசிம் பீவி அப்துல் காத‌ர் ம‌க‌ளிர் க‌ல்லூரி நாட்டு ந‌ல‌ப்ப‌ணித்திட்ட‌ துவ‌க்க‌விழாவில் பொதுச்செய‌லாள‌ர் ப‌ங்கேற்பு

Read Next

சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *