கடற்காற்றில் அறப்போர்..

Vinkmag ad
pover

ரு பிடி வீரம்
உலுக்கிப்போனதிந்த நகரம்
ஒரு அறமமேந்தியப் போர்
உடைந்துபோனது இந்திய முகம்;
ஒரு காட்சி
விழுங்கித் தின்கிறது பகலையும் இரவையும்
உயிர் சாட்சி
ஒருங்கே நின்றது ஆணும் பெண்ணும்;;
சிறு கடலடி
சினத்தில் பொங்கியது மானம்
இனி ஒரு கொடி
இரண்டாய் ஆனாலும் ஆகும்;
எவர் இவர்
எம் உரிமை பறித்தல் தீது
எது வரினு மெமது
வாக்கு வெல்வதே மாண்பு;
சுடுசொல்
சுடுசொல் போட்டு வாரீர்
ஒரு சொல்
ஒரு சொல் சுட எழுவோம்;
விதையாய் உயிர்களை
விதைத்த தேசம்
விழுந்தாலும் வீரம் பூண்டே
எழுவோம்;
அலையாய்
அலையாய் மீண்டும் வருவோம்
கடலாய்
ஒரு நீதிக்கென உயிர் தருவோம்;
இனி நில்லோம்
எக் கயவர்தம் கபடமினி ஓயும்
கடலும் அலையுமெம் காளையின்
வீரத்தைப் பேசும்;
பரம்பரை பரம்பரை யாட்டமாடு
புஜமது புடைத்திட பாடு
தமிழச்சி முலைப்பால் குடித்த நெஞ்சே
உன் காளைக்கும் உரிமையுண்டு கேளு;
அடங்கி
அடங்கிப் போனதே சாபம்
ஒதுங்கி
ஒதுங்கி நின்றதே பாவம்;
இனி துடித்துயெழு
நிலம் அதிர்ந்திட வீரம் கொள்
அடிமை உடை
தணல் பரப்பி நீதி யுரை
அறம் அறைந்திட
உரிமையைக் கேட்டு வாங்கு
புரட்சி செய்
பாரிற்கு இவண் தமிழனென்றுக் காட்டு!!
—————————————————————————–
வித்யாசாகர்

News

Read Previous

காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சி

Read Next

ஒடுக்குமுறை அரசியலின் உண்மை முகம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *